தகாத உறவில் கணவர்.. வேலைக்காரனுடன் மனைவி கூட்டு - பாம்பை வைத்து பரலோகம் அனுப்ப பிளான்!

Attempted Murder Andhra Pradesh Snake Death
By Vinothini Oct 19, 2023 11:46 AM GMT
Report

கணவர் தகாத உறவி இருந்தகால் மனைவி செய்த காரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்காதல்

ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் பிரவீன் 42 வயதான இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு லலிதா என்ற மனைவியும், மூன்று குழந்தைகளும் உள்ளனர். இவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதனையறிந்த மனைவி இவரை கண்டித்துள்ளார், ஆனால் அவர் கேட்காமல் அந்த பெண்ணுடன் பழகி வந்தார்.

women-killed-her-husband-by-using-venomous-snake

இது குறித்து இவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும், இவர் அடிக்கடி குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார், இதனால் மனம் வெறுத்துப்போன மனைவி அவரை கொலை செய்ய முடிவு செய்தார். அதனால் இவர் வேலைக்காரனுக்கு நிலம் தருவதாக கூறி கூட்டு சேர்ந்து அவரை கொலை செய்ய திட்டமிட்டனர்.

சாம்பிராணி போடும் சாக்கில் 6 வயது சிறுமியை சீரழித்த இளைஞர் - அதிர்ச்சி!

சாம்பிராணி போடும் சாக்கில் 6 வயது சிறுமியை சீரழித்த இளைஞர் - அதிர்ச்சி!

கொலை

இந்நிலையில், அவர் விஷப்பாம்பை வரவைத்து, பிரவீன் மது அருந்திவிட்டு வீட்டில் தூங்கும்போது பாம்பைவிட்டுக் கடிக்க வைத்திருக்கிறார். இதனால் விஷம் ஏறி அவர் உயிரிழந்தார், மறுநாள் மாரடைப்பால் பிரவீன் உயிரிழந்ததாகத் தெரிவித்து, இறுதிச்சடங்குக்கு ஏற்பாடு செய்துள்ளார்.

பிரவீன், லலிதா

ஆனால், இறந்த பிரவீனின் உடல் நீலமாக மாறியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் போலீசில் புகாரளித்தனர். அதைத் தொடர்ந்து விசாரித்த காவல்துறை, லலிதாவையும், அவரது கூட்டாளிகளையும் கைதுசெய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.