ஆந்திராவில் பரபரப்பு.. இளம்பெண்ணுக்கு போன் செய்த இளைஞரை கண்மூடித்தனமாக தாக்கிய இளைஞர்கள் .. நடந்தது என்ன?

crime andhra
By Irumporai May 14, 2021 11:58 AM GMT
Report

ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே இளம்பெண்ணுக்கு போன் செய்ததால் இளைஞனை அறைக்கு வரவைத்து கண்மூடித்தனமாக தாக்கிய இளைஞர்கள் கைது.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள மதனப்பள்ளி ராமாபுரம் பகுதியை சேர்ந்தவர் மகேஷ். அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணிற்கு கடந்த வாரத்திற்கு முன்பு போன் செய்து அந்தப் பெண்ணிடம் பேசிக்கொண்டிருந்தபோது பெண்ணின் அண்ணன் இதனை பார்த்து அந்தப் பெண்ணிடமிருந்து நம்பரை வாங்கி மகேஷை அருகில் உள்ள ஹோட்டல் அறைக்கு வருமாறு அந்த பெண்ணின் அண்ணன் அழைப்பு விடுத்துள்ளான்.

இதனையடுத்து அங்கு சென்ற மகேஷை அருகில் காத்திருந்த சில இளைஞர்கள் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். இதனை வீடியோ படமாக்கி எவனாவது என் தங்கையை பார்த்தால் இதுதான் கதி என்று வாட்ஸ்அப் குரூப்பில் பரப்பியுள்ளனர்.

ஆந்திராவில் பரபரப்பு.. இளம்பெண்ணுக்கு போன் செய்த இளைஞரை கண்மூடித்தனமாக தாக்கிய இளைஞர்கள் .. நடந்தது என்ன? | Excitement In Andhra Pradesh Girl Was Blindfolded

இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி உள்ளது. இதனை அடுத்து மதனப்பள்ளி இரண்டாவது காவல் நிலையத்திலிருந்து மகேஷுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனை அடுத்து மகேஷ் அளித்த புகாரின் பெயரில் பெண்ணின் அண்ணன் உள்பட மூன்று பேரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.