பேரன் வயசு.. 10-ம் வகுப்பு சிறுவனை கட்டாயப்படுத்தி சீரழித்த 55 வயது பெண் - கொடுமை!

POCSO Crime Thanjavur
By Vinothini Oct 26, 2023 08:36 AM GMT
Report

55 வயது பெண் ஒருவர் சிறுவனை சீரழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதியவர் இல்லம்

தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தை அடுத்த பட்டீஸ்வரம், சோழன்மாளிகை பகுதியை சேர்ந்தவர் வீரசோழன், இவரது மனைவி சூர்யகலா 55 வயதான இவர் முதியோர் இல்ல காப்பகம் ஒன்றையும் நடத்தி வருகிறார். இந்த காப்பகத்தில் பல முதியோர்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு காலையில் தினமும் பெண் ஒருவர் உணவு கொண்டுவந்து கொடுப்பார்.

15-year-old-boy-sexually-harassed-by-women

சில நாட்களாக அவர் வருவதில்லை, அவரது 10ம் வகுப்பு படித்துவருகிறார், 15 வயது சிறுவன் சாப்பாடு எடுத்து சென்று கொடுத்துள்ளார். இவர் சில நாட்களாகவே சோர்ந்துபோய் பலவீனமாக இருந்துள்ளார்.

நாயை விட கேவலமா நடத்துறாங்க.. 4 மணிநேரம் பியூட்டிசியனை அறையில் அடைத்து கொடுமை - கதறும் பெண்!

நாயை விட கேவலமா நடத்துறாங்க.. 4 மணிநேரம் பியூட்டிசியனை அறையில் அடைத்து கொடுமை - கதறும் பெண்!

பாலியல் தொல்லை

இந்நிலையில், அவரது பெற்றோர் அவரிடம் விசாரித்தபொழுது அவர் தன்னிடம் சூர்யகலா, தினமும் தவறாக நடந்து கொண்டதாக கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் சுவாமிமலை போலீசுக்கும், மகளிர் போலீசுக்கும் சென்று புகார் தந்தனர். இந்த புகாரின்பேரில் விசாரணை மேற்கொண்டதில் அந்த பெண் சீரழித்தது உறுதியாக தெரியவந்தது.

15-year-old-boy-sexually-harassed-by-women

மேலும், இவரது நண்பர் முருகன் (52 வயது) அவரும் உடந்தையாக இருந்ததாக அவரையும் போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.