அரசு பள்ளி வகுப்பறையில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை - பரபரப்பு சம்பவம்!

Ramanathapuram Death
By Sumathi Nov 20, 2023 08:28 AM GMT
Report

வகுப்பறையில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

10ம் வகுப்பு மாணவன்

ராமநாதபுரம், புனவாசல் கிராமத்தை சேர்ந்தவர் ஜெகநாதன். இவரது மகன் தீபக்(15). கடலாடியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வந்தார். இந்நிலையில், இன்று காலை பள்ளி வகுப்பறையில் தூக்கிட்ட நிலையில் தற்கொலை செய்து கொண்டார்.

10th-student-suicide-in-class-room

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சக மாணவர்கள் ஆசிரியர்களிடம் தெரிவித்து உடனடியாக போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. பள்ளிக்கு விரைந்த போலீஸார் உடலை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

வகுப்பறையிலேயே மது அருந்திய மாணவர்கள் - மிரண்டு போன அரசு பள்ளி நிர்வாகம்!

வகுப்பறையிலேயே மது அருந்திய மாணவர்கள் - மிரண்டு போன அரசு பள்ளி நிர்வாகம்!

தூக்கிட்டு தற்கொலை

தொடர்ந்து, நடத்திய விசாரணையில் தீபக் இன்று காலை 8 மணிக்கு பள்ளிக்கு வந்ததாகவும், சோர்வுடன் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவன் தீபக்கிற்கும், அவரது பெற்றோருக்குமிடையே மனஸ்தாபம் ஏற்பட்டதாகவும்,

ramanathapuram

அதன் காரணமாக கடந்த 10 நாட்களுக்கு முன் அவர் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், அவரை தேடி கண்டுபிடித்து பெற்றோர் மீண்டும் வீட்டிற்கு அழைத்து சென்றதும் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.