10-ம் வகுப்பு மாணவி கர்ப்பம் - புதுமனை புகுவிழாவில் திருமணமான நபர் வெறிச்செயல்!

Tamil nadu Sexual harassment Tiruvannamalai Crime
By Jiyath Mar 24, 2024 05:01 AM GMT
Report

திருமணமான நபர் ஒருவர் 10-வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

பாலியல் வன்கொடுமை

காஞ்சிபுரம் மாவட்டம் நெய்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்ராசு. இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இவர் தனது உறவினர் ஒருவரின் புதுமனை புகுவிழா நிகழ்ச்சிக்காக திருவண்ணாமலை மாவட்டம் மாமண்டூர் கிராமத்திற்கு சென்றுள்ளார்.

10-ம் வகுப்பு மாணவி கர்ப்பம் - புதுமனை புகுவிழாவில் திருமணமான நபர் வெறிச்செயல்! | 10Th Class Girl Pregnant In Tiruvannamalai

அப்போது விழாவிற்காக அங்கு வந்திருந்த 10-ம் வகுப்பு மாணவியை, சின்ராசு மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாணவிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதை அடுத்து,

இரவில் தனியாக செல்லும் வாலிபர்கள்; ஆசை காட்டி அட்டகாசம் - 14 இளம்பெண்கள் கைது!

இரவில் தனியாக செல்லும் வாலிபர்கள்; ஆசை காட்டி அட்டகாசம் - 14 இளம்பெண்கள் கைது!

மாணவி கர்ப்பம் 

அவரது பெற்றோர் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்துள்ளனர். அதில் மாணவி கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் விசாரித்தபோது, மாணவி தனக்கு நடந்ததை கூறியுள்ளார்.

10-ம் வகுப்பு மாணவி கர்ப்பம் - புதுமனை புகுவிழாவில் திருமணமான நபர் வெறிச்செயல்! | 10Th Class Girl Pregnant In Tiruvannamalai

இதுகுறித்து செய்யாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகாரில் அளித்தனர். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சின்ராசுவை தேடி வருகின்றனர்.