10 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை - சத்தம் போட்டதால் இளைஞர் வெறிச்செயல்!

Attempted Murder Crime Dharmapuri
By Sumathi Mar 14, 2024 07:51 AM GMT
Report

10 வயது சிறுவன் பாலியல் தொல்லை அளித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

பாலியல் தொல்லை

தருமபுரி, மிட்டாரெட்டிஅள்ளி பகுதியைச் சேர்ந்தவர்கள் மன்மதன் - சீதா தம்பதி. இவர்களது மகன் வழக்கம் போல் போல வீட்டைவிட்டு வெளியே விளையாடச் சென்றுள்ளான். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் பெற்றோர் சிறுவனை தேடியுள்ளனர்.

10 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை - சத்தம் போட்டதால் இளைஞர் வெறிச்செயல்! | 10 Year Old Boy Killed For Refusing To Have Sex

தொடர்ந்து போலீஸில் புகாரளித்துள்ளனர். இந்நிலையில், அவர்களது வீட்டருகே உள்ள கிணற்றில் சிறுவன் சடலமாக மிதந்திருக்கிறான். உடனே உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு போலீஸார் அனுப்பினர். அதன்பின் அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

பாலியல் தொல்லை கொடுத்த திருநங்கைகள்; கதறிய 16 வயது சிறுவன் - ஆயுள் தண்டனை!

பாலியல் தொல்லை கொடுத்த திருநங்கைகள்; கதறிய 16 வயது சிறுவன் - ஆயுள் தண்டனை!

சிறுவன் பலி

அதில், சந்தேகத்தின் பேரில் அப்பகுதியைச் சேர்ந்த இளங்கோ என்ற இளைஞரிடம் விசாரித்ததில் பலியான சிறுவனை தனி இடத்தில் வைத்து இளங்கோ பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். அப்போது சிறுவன் சத்தம் போட்டதால் ஆந்திரமடைந்த இளங்கோ, சிறுவனை கிணற்றில் தள்ளி கொலை செய்தது தெரியவந்தது.

10 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை - சத்தம் போட்டதால் இளைஞர் வெறிச்செயல்! | 10 Year Old Boy Killed For Refusing To Have Sex

அதன் அடிப்படையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, புதுச்சேரியில், 9 வயது சிறுமியை கஞ்சா போதையில் இரண்டு நபர்கள் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கி கொலை செய்து கழிவு நீர்க் கால்வாயில் வீசிய கொடூரம் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.