இன்ஸ்டாவில் பேசியே 1 வாரம்தான்.. கணவனையும், மகனையும் விட்டு இளைஞருடன் சென்ற பெண்

Marriage Bengaluru Relationship
By Sumathi Apr 11, 2025 07:03 AM GMT
Report

இன்ஸ்டாகிராமில் அறிமுகமான ஒரே வாரத்தில் இளைஞரை சிறுவனின் தாய் ஒருவர் திருமணம் செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

இன்ஸ்டா பழக்கம்

பெங்களூரு, நெலமங்களா டவுன் பகுதியில் வசித்து வருபவர் ரமேஷ். இவரது மனைவி நேத்ராவதி(30). இவர்களுக்கு 8 வயதில் மகன் உள்ளார். லாரி டிரைவரான ரமேஷ், வாரத்தில் 2 அல்லது 3 நாட்கள் வெளியே தங்கி வந்துள்ளார்.

ரமேஷ் - நேத்ராவதி

அந்த நேரத்தில் நேத்ராவதி இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோ வெளியிடுவதில் ஆர்வம் காட்டி வந்துள்ளார். இந்நிலையில் திடீரென காணாமல் போயுள்ளார். கணவர் எங்கு தேடியும் கிடைக்காததில்,

2வது கணவரை உதறிவிட்டு சிறுவனுடன் சென்ற தாய் - 3 குழந்தைகள் தவிப்பு

2வது கணவரை உதறிவிட்டு சிறுவனுடன் சென்ற தாய் - 3 குழந்தைகள் தவிப்பு

தவிக்கும் மகன்

நேத்ராவதி சந்தோஷ் என்ற இளைஞரை திருமணம் செய்துகொண்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் இன்ஸ்டாவில் வெளியாகியுள்ளது. இன்ஸ்டாகிராமில் ஒரு வாரத்திற்கு முன்பாக தான் நேத்ராவதிக்கு சந்தோஷ் அறிமுகம் ஆகியுள்ளார்.

இன்ஸ்டாவில் பேசியே 1 வாரம்தான்.. கணவனையும், மகனையும் விட்டு இளைஞருடன் சென்ற பெண் | Married Woman Elope With Insta Boyfriend Bengaluru

உடனே, கணவர் மற்றும் 8 வயது மகனை தவிக்கவிட்டுவிட்டு சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த கணவன் போலீஸில் புகாரளித்துள்ளார்.

அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.