நூழிலையில் தப்பிய உக்ரைன் அதிபர் - ரஷ்ய பெண் சதிச்செயல் அம்பலம்!
அதிபர் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த ரஷ்ய பெண் உளவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலை முயற்சி
ரஷ்ய -உக்ரைன் போர் கடந்த ஓராண்டுக்கு மேல் நடந்து வருகிறது. தற்போது, உக்ரைனின் தெற்கு மாகாணங்களில் கனமழை, வெள்ளம் காரணமாக பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மைகோலாவிவ் என்ற பகுதியில் வெள்ளத்தால் பாதித்த பகுதிகளை அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி பார்வையிட்டார். அப்போது, சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவரை பாதுகாப்புபடையினர் பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
பெண் கைது
அதில், அந்த ரஷ்ய பெண் உளவாளி என்பதும், ஜெலன்ஸ்கியை வேவு பார்த்தது மட்டுமின்றி, அவர் மீது தாக்குதல் நடத்திடவும் திட்டமிடப்பட்டிருந்தது தெரியவந்தது.
உடனே பெண் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. அதனையடுத்த அறிக்கையில் ரகசியத் தகவல்களை ரஷ்ய உளவு அமைப்புக்கு அனுப்பிக் கொண்டிருந்தபோது அந்தப் பெண் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார் என எஸ்பியு தெரிவித்துள்ளது.
பெண்னின் முகங்களை மறைத்து கைது செய்யப்பட்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது.