வாழ்க்கையவே தோனி அழிச்சுட்டாரு - எல்லை மீறிப் பேசிய யுவராஜ் சிங்கின் தந்தை
யுவராஜ் சிங் தந்தை பேசியுள்ள தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
யுவராஜ் சிங் தந்தை
இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ்(63). பல முறை தோனி மற்றும் கபில் தேவ் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
அந்த வரிசையில் தற்போதும் அவர் பேசியுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 'யுவராஜ் சிங்கின் கிரிக்கெட் வாழ்க்கையை தோனி கெடுத்து விட்டார்.
சர்ச்சை பேச்சு
அவரை ஒரு போதும் மன்னிக்க மாட்டேன்' என யோகிராஜ் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அவர் கூறியிருப்பதாவது: தோனியை நான் மன்னிக்க மாட்டேன். அவரது முகத்தை அவரே கண்ணாடியில் பார்த்துக் கொள்ளட்டும்.
அவர் மிகப்பெரிய கிரிக்கெட் வீரர். ஆனால் என் மகனுக்கு எதிராக அவர் செய்தது எல்லாம் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் வந்து கொண்டிருக்கிறது. இதை என்னுடைய வாழ்நாளில் மன்னிக்க முடியாது’ எனத் தெரிவித்துள்ளார்.