இந்திய அணிக்கு நல்ல கேப்டன் தான் தேவை - சலசலப்பான ஏற்படுத்தும் யுவராஜ் சிங் கருத்து!!
அடுத்த மாதம் துவங்கவுள்ள உலகக்கோப்பை டி20 தொடர் குறித்து தான் பலரும் எதிர்பார்ப்பில் உள்ளார்கள்.
உகக்கோப்பை டி 20
ஜூன் மாதம் துவங்கவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடும் இந்திய அணி அண்மையில் அறிவிக்கப்பட்டது.
ரோகித் சர்மா தலைமையிலான அணியில் விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா(துணை கேப்டன்), ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சஹல், அர்ஷிதீப் சிங், ஜஸ்பிரீத் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
மேலும், மாற்று வீரர்களாக சுப்மன் கில், கலீல் அகமது, அவேஷ் கான், ரிங்கு சிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
நல்ல கேப்டன்
உலகக்கோப்பைக்கான விளம்பரத் தூதராக யுவராஜ் சிங் அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் இந்திய அணி மற்றும் கேப்டன் ரோகித் சர்மா குறித்து தெரிவித்த கருத்துக்கள் வைரலாகி வருகின்றன.
ரோகித் அணியில் இருப்பது மிகவும் முக்கியமானது என்ற யுவராஜ், அணிக்கு நல்ல கேப்டன் தேவை என்றும் இக்கட்டான சமயங்களில் விவேகமான முடிவுகள் எடுக்கக்கூடிய கேப்டன் தேவை என குறிப்பிட்டு அது ரோகித் தான் என்றார்.
கேப்டனாக ஐபிஎல் தொடரில் 5 கோப்பைகளை வென்றுள்ள ரோகித்தை போன்ற கேப்டன் தான் இந்திய அணிக்கு தேவை என சுட்டிக்காட்டிய யுவராஜ், ரோகித்தை உலகக்கோப்பையுடன் பார்க்க விரும்புவதாகவும் கூறினார்.
அவர் அதற்கு தகுதியானவர் தெரிவித்த யுவராஜ், பல வெற்றிகளை பெற்ற பின்னும் இன்னும் ரோகித் மாறவில்லை என பாராட்டினார்.