மக்களவை தேர்தலில் போட்டி.? பாஜகவில் இணைந்துவிட்டாரா யுவராஜ்..?
இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரரான யுவராஜ் சிங் வரும் மக்களவை தேர்தலை போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகி வேகமாக பரவி வருகின்றது.
யுவராஜ் சிங்
6 பால் 6 சிக்ஸ், உலக கோப்பையை இந்திய வென்ற போது தொடர் நாயகன், கேன்சர் போராட்டத்தில் வெற்றி என பல சாதனை - சோதனையை கொண்டவர் யுவராஜ் சிங்.
இன்றளவும் இந்திய ரசிகர்களால் பெரிதும் அபிமானிக்கப்படும் வீரராக இருந்து வரும் யுவராஜ் சிங், அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து ஒய்வு பெற்று விட்டார்.
தேர்தலில் போட்டி
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த அவர் வரும் மக்களவை தேர்தலில் போட்டியிடவுள்ளதாக சில நாட்களாக தகவல்கள் வெளியாகி பெரும் வைரலாகி வருகின்றது.
மத்தியில் தற்போது ஆட்சியில் இருக்கும் பாஜகவின் சார்பாக அவர் போட்டியிட இருப்பதாகவும், பஞ்சாப்பின் குர்தாஸ்பூர் தொகுதியில் தான் அவர் போட்டியிடுகிறார் என்றெல்லாம் தொடர்ந்து செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன.
Contrary to media reports, I'm not contesting elections from Gurdaspur. My passion lies in supporting and helping people in various capacities, and I will continue to do so through my foundation @YOUWECAN. Let's continue making a difference together to the best of our abilities❤️
— Yuvraj Singh (@YUVSTRONG12) March 1, 2024
இது குறித்து யுவராஜ் சிங் விளக்கமளித்துள்ளார். அவரின் எக்ஸ் தள பதிவு வருமாறு,
ஊடக அறிக்கைகளுக்கு மாறாக, நான் குர்தாஸ்பூரில் தேர்தலில் போட்டியிடவில்லை. எனது ஆர்வம் பல்வேறு திறன்களில் உள்ளவர்களுக்கு ஆதரவளிப்பதிலும் உதவுவதிலும் உள்ளது, மேலும் எனது அறக்கட்டளையின் மூலம் அதைத் தொடர்ந்து செய்வேன் @YOUWECAN எங்களின் சிறந்த திறனுக்கு ஒன்றாக மாற்றத்தை உருவாக்குவோம்❤️ என பதிவிட்டுள்ளார்.