பள்ளி மாணவிகளை சீரழித்த இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மன்னன் - செல்போன் சோதனையில் அதிர்ந்த போலீசார்!

Tamil nadu Sexual harassment Instagram Crime Kallakurichi
By Jiyath Dec 06, 2023 07:11 AM GMT
Report

இன்ஸ்டாகிராம் மூலம் பள்ளி மாணவிகளை காதல் வலையில் வீழ்த்தி, ஆபாச வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டிய இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆபாச வீடியோ 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் சோகத்துடன் இருந்ததைப் பார்த்து, அவரின் தாத்தா என்ன நடந்தது? என்று விசாரித்துள்ளார். அப்போது ஆரூர் கிராமத்தை சேர்ந்த அருண்பிரசாத் என்ற இளைஞர் தன்னை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டுகிறார் என்று அந்த மாணவி கூறியுள்ளார்.

பள்ளி மாணவிகளை சீரழித்த இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மன்னன் - செல்போன் சோதனையில் அதிர்ந்த போலீசார்! | Youth Violated Girls Through Insta Kallakurichi

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் தாத்தா, அருண்பிரசாத் வீட்டிற்கு சென்று நியாயம் கேட்டுள்ளார். அதில் அருண்பிரசாத் மலுப்பலாக பதில் அளிக்கவே, அவரின் செல்போனை தாத்தா பறித்துள்ளார். அந்த செல்போனில் தனது பேத்தி உட்பட பல பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருப்பதைக் கண்ட தாத்தா அதிர்ச்சியடைந்துள்ளார்.

பின்னர் இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சங்கராபுரம் காவல் நிலையத்தில் மாணவியின் தாத்தா புகார் அளித்தார். இதனையடுத்து அருண்பிரசாத் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளது.

சுற்றியும் அவ்வளவு பெண்கள்; மேடையில் கதறி அழுத வடகொரிய அதிபர் - அவரின் கோரிக்கை..?

சுற்றியும் அவ்வளவு பெண்கள்; மேடையில் கதறி அழுத வடகொரிய அதிபர் - அவரின் கோரிக்கை..?

இளைஞருக்கு வலைவீச்சு 

இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோக்கள் மற்றும் டிப்டாப் உடையில் புகைப்படங்களை அருண்பிரசாத் வழக்கமாக பதிவிட்டு வந்துள்ளார். அதன் மூலம் பல பெண்களை கவர்ந்த அவர் தனது பகுதியைச் சேர்ந்த பெண்களை கண்டறிந்து, அவர்களிடம் சாட் செய்து வந்துள்ளார்.

பள்ளி மாணவிகளை சீரழித்த இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மன்னன் - செல்போன் சோதனையில் அதிர்ந்த போலீசார்! | Youth Violated Girls Through Insta Kallakurichi

பின்னர் அவர்களை காதல் வலையில் வீழ்த்தி வீடியோ காலில் பேச வைத்துள்ளார். பின்னர் வீடியோ காலில் அந்த பெண்களை ஆடைகளை களையச் செய்து வீடியோவாக பதிவு செய்து வைத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. சில பெண்கள் அவர்களாகவே தங்களது ஆபாசப் படங்களை அருண் பிரசாத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த ஆபாச வீடியோ மற்றும் புகைப்படங்களை வைத்து சம்பந்தப்பட்ட பெண்களை அருண் பிரசாத் மிரட்டி நகை மற்றும் பணம் பறிப்பதை செய்து வந்துள்ளார்.

மேலும், சில பெண்களை மிரட்டி தனிமையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரங்கள் போலீசாருக்கு தெரியவந்ததை அடுத்து, அருண்பிரசாத்தை கைது செய்ய முயன்றபோது அவர் தலைமறைவாகியுள்ளார். தற்போது அவரை கைது செய்ய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.