இறந்த காதலியுடன் திருமணம் - இனி யாரையும் கல்யானம் செய்யமாட்டேன் என சத்தியம்!

Assam Relationship Death
By Sumathi Nov 20, 2022 11:40 AM GMT
Report

உயிரிழந்த தன் காதலியை இளைஞர் ஒருவர் திருமணம் செய்து கொண்ட நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

தீராத காதல்

அசாமில் வசித்து வருபவர் பிதுவன் தாமுலி(24). இவர் பிராத்தனா போரா என்பவரை காதலித்து வந்தார். சமீபத்தில் இவர் காதலி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். காதலியின் இறப்பை தாங்கிக் கொள்ள முடியாத தாமுலி கதறி அழுதார்.

இறந்த காதலியுடன் திருமணம் - இனி யாரையும் கல்யானம் செய்யமாட்டேன் என சத்தியம்! | Youth Marries Dead Girlfriend In Assam

தொடர்ந்து, சமாதானம் ஆகி கண்ணீருடன் எழுந்து சென்று போராவின் கழுத்தில் தாலி கட்டி தான் இனி திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று சத்தியம் செய்தார். இது தொடர்பாக அவர்களின் உறவினர்கள் கூறுகையில்,

நெகிழ்ச்சி

"நாங்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்திருந்தோம். இதற்கான ஏற்பாடுகளைத் தொடங்க இருந்தோம். இருப்பினும், திடீரென யாரும் எதிர்பார்க்காத விதமாக பிராத்தனாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து கவுஹாத்தியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரை அனுமதித்தோம். எவ்வளவோ முயன்றும் கூட அவரை டாக்டர்களால் காப்பாற்ற முடியவில்லை என கூறினர். இச்சம்பவம் அப்பகுதி முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.