சிறுமியை பாலியல் வன்கொடுமை..அவதூறு பரப்பிய நபர் - விரக்தியில் இளைஞர் எடுத்த முடிவு!
பாலியல் வன்கொடுமை செய்ததாக தன்மீது அவதூறு பரப்பி விட்டதாக இளைஞர் தற்கொலை செய்து கொண்டார்.
அவதூறு
மதுரை பைகாரா பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் பிரகாஷ். இவர் கடந்த சில நாட்களாக வெளியூர் சென்றிருக்கிறார். அப்போது, ராஜா என்பவர் பிரகாஷ் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.
இதனால் மனவேதனை அடைந்த பிரகாஷ் ஊருக்குள் வருவதற்கு அவமானமாக இருப்பதாக கூறி வீடியோ வெளியிட்டு நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ள அச்சம்பத்து பகுதியில் உள்ள மெக்கானிக் ஒர்க் ஷாப்பில் தற்கொலை செய்து கொண்டார்.
இளைஞர்
அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது, "குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து ஒரு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து விட்டதாக ஊர் முழுக்க தன்னைப் பற்றி ராஜா என்பவர் அவதூறு பரப்பியுள்ளார்.
என்னை ஊருக்குள் செல்ல முடியாத நிலைக்கு தள்ளி விட்டனர். என் சாவுக்கு ராஜா என்பவர்தான் காரணம்" என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து, பிரகாஷ் குடும்பத்தினர்
ராஜாவை கைது செய்யக் கோரி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
(தற்கொலை எண்ணங்களில் இருந்து விடுபட ஆலோசனைகளை பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் - 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் - 044-24640050)