10-ம் வகுப்பு மாணவனை பெட்ரோல் ஊற்றி எரித்த இளைஞன் - கொடூர கொலை!

Andhra Pradesh Crime
By Vinothini Jun 17, 2023 10:33 AM GMT
Report

ஆந்திராவில் 10-ம் வகுப்பு படித்த மாணவனை பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொலை

ஆந்திர மாநிலம், குண்டூர் அருகே அமர்நாத் என்ற 10-ம் வகுப்பு படிக்கும் மாணவன் உள்ளார். இதில் வெங்கடேஸ்வர் என்ற 21 வயது இளைஞன், அந்த சிறுவனின் அக்காவிடம் தவறாக நடந்துள்ளார்.

youngster-killed-a-boy-in-andhra

இதனை அந்த சிறுவன் தட்டிக்கேட்டுள்ளார். பின்னர், இவர் டியூசன் முடித்துவிட்டு வந்துகொண்டிருந்தார். அப்பொழுது அந்த இளைஞன் அவரது சக நபர்கள் 4 பேருடன் வந்து சிறுவன் மீது பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு அங்கிருந்து தனப்பி ஓடினர்.

விசாரணை

இந்நிலையில், அங்கு அக்கம் பக்கத்தினர் அந்த சிறுவனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது, ஆனால் அந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

youngster-killed-a-boy-in-andhra

மேலும், அந்த சிறுவன் கடைசி நொடிகளில் அந்த இளைஞன் மற்றும் அவர்து நபர்களின் பெயரை கூறிவிட்டு இறந்தார். பின்னர், போலீசார் அதனை வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.