மந்திரவாதியிடம் பல லட்சங்களை பறிகொடுத்த இளம்பெண்

woman kuwait magician snatched
By Jon Apr 04, 2021 07:06 AM GMT
Report

குவைத் நாட்டில் இளம் பெண் ஒருவர் சுமார் 30,000 தினார்களை பறிகொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நவீன உலகத்தில் கூட மக்கள் மந்திர,தந்திரங்கள் என படித்தவர்கள் கூட இதனை நம்பி சிக்கி சின்னாபின்னமான சம்பவங்கள் நடந்துகொண்டு தான் இருக்கின்றது. அது போல குவைத்தில் இது போல இளம் பெண் ஒருவர் மந்திரவாதியிடம் சுமார் 30,000 தினார்களை இழந்துள்ளார்.

குவைத் நாட்டில் வசித்து வரும் 36 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தன்னை ஜீன் என்னும் பேயின் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக நம்பினார். எனவே அவர் ஒரு மந்திரவாதியை அணுகினார். அந்த மந்திரவாதியும் ஏதேதோ சொல்லி அந்த பெண்ணிடம் 30,000 தினார்களை அவர் வாங்கியுள்ளார்.

30,000 தினார் என்றால் இந்தியா ருபாய் மதிப்பில் சுமார் 73 லட்சம் ஆகும். இதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளான அந்த பெண் அந்த மாந்தீரிகன் மீது போலீசில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரில் தெரிவித்ததாவது, அந்த மாந்திரகன் தன்னிடம் 25,080 தினார்களை பெற்றதற்கான வங்கி பரிமாற்றம் உள்ளதாக தெரிவித்திருந்தார்.

மேலும் 4000 தினார்கள் வழங்கியதற்கான ஆதாரமும் வைத்திருந்தார் . இந்த மந்திரவாதியிடம் செல்ல ஆலோசனை வழங்கிய இரண்டு பெண்கள் இருந்தனர். அவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் இருவரும் விசாரனைக்கு அழைத்து வரப்பட்டனர். இதுபோன்ற பல சம்பவங்கள் இன்னும் நடைபெற்று வருவது தான் மிகவும் சோகமான தகவலாகும்.