2 நிமிட இன்பத்திற்காக; இளம்பெண்கள் பாலியல் உணர்வை கட்டுப்படுத்துங்க - உயர்நீதிமன்றம் அட்வைஸ்!

West Bengal
By Sumathi Oct 21, 2023 04:04 AM GMT
Report

இளம் பெண்கள் பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என கொல்கத்தா உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பாலியல் வன்கொடுமை

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மைனர் சிறுமி இளைஞர் ஒருவரும் உறவு கொண்டுள்ளார். சிறுமி என்பதால் அந்த நபர் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.

sexual harrassment

இத்தண்டனையை எதிர்த்து அந்த நபர் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவின் விசாரணையில், சம்பந்தப்பட்ட பெண் இருவரும் காதலித்ததாகவும், தனது விருப்பத்தின் பேரில்தான் உறவு கொண்டு திருமணம் செய்துகொண்டதாகவும் தெரிவித்தார்.

பாலியல் வழக்கில் ஜாதகம் பார்க்க சொன்ன உயர் நீதிமன்றம் - அதிரடி காட்டிய உச்ச நீதிமன்றம்!

பாலியல் வழக்கில் ஜாதகம் பார்க்க சொன்ன உயர் நீதிமன்றம் - அதிரடி காட்டிய உச்ச நீதிமன்றம்!

கோர்ட் அறிவுரை

அதன்படி, தண்டனையை நிறுத்தி வைத்த நீதிபதிகள், ''இளம் வயதில் பாலியல் உறவுகளால் ஏற்படும் சட்டச்சிக்கல்களை தவிர்க்க பள்ளிகளில் விரிவான பாலியல் கல்வி கற்பிக்கப்படுவது அவசியமாகும். இளம் வயதில் பாலியல் உணர்வு இயற்கையானது. அது ஆண் அல்லது பெண்ணின் தூண்டல் வாய்ப்பைப் பொறுத்து தூண்டப்படுகிறது.

kolkata court

இளம் பெண்கள் பாலியல் தூண்டுதல்களை கட்டுப்படுத்தவேண்டும். இரண்டு நிமிட இன்பத்திற்கு இடமளிக்காதீர்கள். உங்கள் உடலின் கண்ணியம், சுயமதிப்பை பாதுகாப்பது கடமையாகும். பெண்கள் இரண்டு நிமிட இன்பத்திற்கு ஆசைப்பட்டு பாலியல் உணர்வுகளுக்கு இடமளிக்கும் பட்சத்தில் அவர்கள் இந்த சமுதாயத்தின் பார்வைக்கு இழந்தவர்களாகத் தெரிகின்றனர்.

வாலிபர்களும் பெண்களின் கண்ணியத்திற்கு மதிப்பளிக்க வேண்டும். இளம்பெண்களின் கடமை, சுயமரியாதை, கண்ணியம், தனியுரிமை, உடல் சுய உரிமைக்கு மதிப்பளிக்க இளைஞர்கள் கற்றுக்கொள்ளவேண்டும்'' எனத் தெரிவித்துள்ளனர்.