இருவருக்கும் சம்மதம்; சிறுமியுடன் பாலியல் உறவு குற்றமல்ல - உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Odisha
By Jiyath Jul 12, 2023 03:50 PM GMT
Report

 பாலியல் செயலில் ஈடுபடும் இருவருக்கும் சம்மதம் இருக்கும் பட்ச்சத்தில் சிறுமியுடனான உடலுறவு பலாத்காரம் ஆகாது என ஒடிசா உயர்நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

பாலியல் வன்கொடுமை

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் சாந்தனு கவுரி என்ற 45 வயது நபர் இவருக்கு திருமணமாக 4 குழந்தைகளும் உள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டு அதே பகுதியைச்சேர்ந்த 17 வயது சிறுமியை தினமும் வணப்படுத்திக்கு கூட்டிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.

இருவருக்கும் சம்மதம்; சிறுமியுடன் பாலியல் உறவு குற்றமல்ல - உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! | 17Yearoldgirl Doesnot Constituterape Court 34

அதையடுத்து ஒருநாள் சிறுமி கர்ப்பமடைந்துள்ளார். தான் கர்ப்பமான விஷயம் கூட தெரியாத சிறுமி சில மாதங்களுக்குப் பின்னர்தான் அவரின் பெற்றோர்களிடம் இதைப்பற்றி தெரிவித்துள்ளார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் போலீசில் புகாரளித்துள்ளனர்.

அதன்பேரில் சாந்தனு கவுரியை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கை விசாரித்த கூடுதல் அமர்வு நீதிமன்றம் சாந்தனு கவுரி குற்றவாளி என தீர்ப்பளித்து அவருக்கு சிறை தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சாந்தனு ஒடிசா உயர்நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.

குற்றவாளி இல்லை

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.கே. சாஹு "குற்றம் சாட்டப்பட்டவருடன் பாதிக்கப்பட்ட சிறுமி தினமும் காட்டுக்குள் உடலுறவு கொண்டுள்ளார். சம்பவத்தின்போது பாதிக்கப்பட்ட சிறுமியின் வயது 17 ஆகா இருந்தது.

குற்றம் சாட்டப்பட்டவருக்கு திருமணமாகி 4 குழந்தைகள் இருப்பது பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தெரிந்தும் அவரோடு உடலுறவு கொண்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி தான் கர்ப்பமாக இருந்தது குறித்து பெற்றோரிடம் தெரிவித்தும் அவரது பாலியல் பலாத்கார செயலை எதிர்க்கவில்லை, அதனை யாரிடமும் கூறவும் இல்லை.

இருவருக்கும் சம்மதம்; சிறுமியுடன் பாலியல் உறவு குற்றமல்ல - உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! | 17Yearoldgirl Doesnot Constituterape Court 34

குற்றம் சாட்டப்பட்ட நபர் பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகவும் உறுதியளிக்கவில்லை. குற்றம் சாட்டப்பட்ட நபர் திருமணமாகி 4 குழந்தைகளுக்கு தந்தை என்பதால், தன்னை திருமணம் செய்து கொள்வதற்கான சாத்தியமில்லை என்பதும் அவருக்குத் தெரியும்.

எனது பார்வையில், அந்த சிறுமியின் சம்மதத்தின் பேரில் எல்லாம் நடந்துள்ளது. எனவே குற்றம் சாட்டப்பட்டவரை தண்டிப்பதற்கான போதுமான காரணங்கள் இல்லை. பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலமானது, பதிவு செய்யப்பட்ட ஆதாரங்களுடன் ஒத்துப்போகவில்லை.

இருவருக்கும் இடையிலான பாலியல் செயலை கற்பழிப்பு என்று கூற முடியாது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையை திரும்பப் பெற வேண்டிய அவசியமும் இல்லை.

எனவே பாலியல் பலாத்காரம் மற்றும் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் 10 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் சாந்தனு கவுரி விடுதலை செய்யப்படுகிறார்’ என்று உத்தரவிட்டுள்ளார்.