தோனியால் 7 பேரின் கிரிக்கெட் வாழ்க்கை சாக்கடையில்.. முன்னாள் வீரர் பகீர் குற்றச்சாட்டு
தோனி கேப்டனாக இருந்தபோது 7 வீரர்களின் கிரிக்கெட் வாழ்க்கை அழிந்ததாக யோகராஜ் சிங் குற்றம்சாட்டியுள்ளார்.
2011 உலகக்கோப்பை
2011ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற பிறகு, இந்திய அணியில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. அந்த மாற்றத்தில் பல முக்கிய வீரர்கள் வெளியேறினார்கள்.
இதுகுறித்து தற்போது முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோகராஜ் பேசியுள்ளார். “நீங்கள் (பிசிசிஐ தேர்வுக்குழு) கவுதம் கம்பீர், யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், ஜாகீர் கான், முகமது கைஃப், விவிஎஸ் லக்ஷ்மன், ராகுல் டிராவிட் ஆகிய வீரர்களை 2011 உலகக்கோப்பை முடிந்தபிறகு அனுப்பிவிட்டீர்கள்.
யோகராஜ் சிங் குற்றச்சாட்டு
2011 உலகக்கோப்பை முடிந்த பிறகு இந்திய அணியை அழித்துவிட்டீர்கள். அந்த 7 வீரர்களின் கிரிக்கெட் வாழ்க்கையை சாக்கடையில் வீசிவிட்டீர்கள். அதனால் தான் இந்திய அணி அப்போது தடுமாறியது. தோனி கேப்டனாக இருந்தபோது 5 தொடர்களில் நாம் தோல்வியடைந்தோம்.
அவர் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்படுவார் என்று மோஹிந்தர் அமர்நாத் தெரிவித்தார்” என கூறியுள்ளார். 2015 உலகக்கோப்பை தொடரில் கவுதம் கம்பீர், யுவராஜ் சிங், ஜாகீர் கான், ஹர்பஜன், என எந்த வீரரும் இல்லை. ஒருநாள் தொடரில் 2017ஆம் ஆண்டு வரையும், தோனி கேப்டனாக இருந்தது குறிப்பிடத்தக்கது.