கோலி அப்படி செய்திருக்க கூடாது; கேப்டனாக்கி இருப்பேன் - ரவி சாஸ்திரி வேதனை
விராட் கோலி ஓய்வு குறித்து ரவி சாஸ்திரி வேதனை தெரிவித்துள்ளார்.
விராட் கோலி ஓய்வு
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி சமீபத்தில் ஓய்வை அறிவித்தார். சுமார் 14 ஆண்டு காலம் இந்திய அணிக்காக 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கிறார்.
இந்நிலையில் இது குறித்து முன்னாள் இந்திய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேசுகையில், "நீங்கள் ஒரு இடத்தை விட்டுப் போகும்போதுதான் மக்களுக்கு நீங்கள் எவ்வளவு பெரிய வீரர் என்பது புரியும். அவர் ஓய்வு பெற்ற முறையை நினைத்து நான் மிகவும் வருந்துகிறேன்.
ரவி சாஸ்திரி வேதனை
அவரது ஓய்வு இன்னும் சிறப்பாக கையாளப்பட்டிருக்க வேண்டும் அல்லது அவருடன் சரியான தகவல் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். நான் அந்த இடத்தில் இருந்திருந்தால் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்குப் பிறகு அவரை கேப்டனாக அறிவித்திருப்பேன்" என தெரிவித்துள்ளார்.
தற்போது இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
கோலி மற்றும் ரோஹித் சர்மா அடுத்தடுத்து டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்த நிலையில், சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் விளையாடவுள்ளது.