29 வயதில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த அதிரடி வீரர் - அதிர்ச்சி
நிக்கோலஸ் பூரன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.
நிக்கோலஸ் பூரன்
சர்வதேச கிரிக்கெட்டில் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்காக அதிக டி20 போட்டிகளில் விளையாடிய வீரர் நிக்கோலஸ் பூரன்(29). 106 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி, 2275 ரன்கள் எடுத்துள்ளார்.
61 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1983 ரன்கள் எடுத்துள்ளார். அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடியது இல்லை. கடைசியாக கடந்த 2023-ல் இலங்கை அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியிலும், கடந்த ஆண்டு வங்கதேச அணிக்கு எதிராக டி20 போட்டியிலும் விளையாடியிருந்தார்.
ஓய்வு அறிவிப்பு
அன்மையில் முடிந்த ஐபிஎல் 2025-ம் ஆண்டு சீசனில் லக்னோ அணிக்காக 14 போட்டிகளில் விளையாடி 524 ரன்களை எடுத்திருந்தார். தற்போது நடைபெறும் இங்கிலாந்து மற்றும் அடுத்து வரும் அயர்லாந்து தொடருக்கான அணியில் அவர் இடம்பெறவில்லை.
இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக பூரன் அறிவித்துள்ளார். இதுகுறித்து “ஆழமாக யோசித்த பிறகே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் எனது முடிவை அறிவிக்கிறேன்” என சமூக வலைதள பதிவு மூலம் தெரிவித்துள்ளார். இது அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.