இது நடந்தால் கோலி டெஸ்ட் போட்டியில் விளையாடுவார் - கிளார்க் முக்கிய தகவல்
விராட் கோலியின் டெஸ்ட் ஓய்வு குறித்து கிளார்க் கருத்து தெரிவித்துள்ளார்.
கோலி ஓய்வு
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி கடந்த மாதம் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். 123 டெஸ்ட் போட்டிகளில் 9,230 ரன்கள், 46.85 சராசரியுடன் 30 சதங்களை விளாசியுள்ளார்.
இந்நிலையில் கோலியின் ஓய்வு குறித்து பேசியுள்ள ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க், "நான் இதை நம்புகிறேன். இந்தியா இங்கிலாந்துக்கு சென்று 5-0 என்று தோல்வியடைந்தால், ரசிகர்கள் விராட் கோலியை ஓய்விலிருந்து மீண்டு டெஸ்ட் கிரிக்கெட் ஆட வேண்டும் என்று விரும்புவார்கள்.
கிளார்க் கருத்து
கேப்டன், தேர்வாளர்கள் மற்றும் ரசிகர்களின் ஆதரவுடன் கோரப்படும்போது, இங்கிலாந்தில் பெரிய தோல்வியைச் சந்தித்தால், அவர் மீண்டு வருவார் என்று நினைக்கிறேன். அவர் இன்னும் டெஸ்ட் கிரிக்கெட்டை விரும்புகிறார். அவரது வார்த்தைகளில் அவரது ஆர்வம் உண்மையானது.
டெஸ்ட் கிரிக்கெட் அவரை இழக்கும், விராட் டெஸ்டை உச்சமாக கருதுகிறார். இன்னும் நல்ல கிரிக்கெட் ஆடுகிறார்.ஆனால் இந்திய அணி 5-0 என்று இங்கிலாந்தில் தோற்கடிக்கப்பட்டால், நான் அப்படி நினைக்கவில்லை. அப்படி நடந்தால் கோலி ஓய்விலிருந்து திரும்பலாம்.
விராட் கோலியும் ரோஹித் ஷர்மாவும் இல்லாமலும் இந்திய அணி இங்கிலாந்தில் வெல்ல முடியும் என்று நினைக்கிறேன். இந்த இந்திய அணி ஒரு நல்ல அணி” எனத் தெரிவித்துள்ளார்.