யோகிபாபுக்கு வந்த சிக்கல் - ‘மண்டேலா’ படத்தை தடை செய்யக் கோரி காவல் ஆணையரிடம் புகார்!

yogibabu movie flim mandela
By Jon Apr 10, 2021 03:30 AM GMT
Report

யோகி பாபு நடித்து வெளியாகி உள்ள படம் மண்டேலா. இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர் நலச் சங்கம் சார்பில் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர் நலச் சங்கம் சார்பில் சென்னை காவல் ஆணையரிடம் அளிக்கப்பட்டுள்ள புகாரில் கூறியிருப்பதாவது

- கடந்த ஏப்ரல் 4ம் தேதி தனியார் தொலைக்காட்சி ஒன்றில் வெளியான மண்டேலா திரைப்படத்தில், முடிதிருத்தும் தொழில் செய்யும் மருத்துவ சமுதாய மக்களை இழிவாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இதனால், அந்தத் திரைப்படத்தை வெளியிட்ட தனியார் தொலைக்காட்சி நிறுவனம், அதைத் தயாரித்த ஒய் நாட் ஸ்டூடியோஸ், படத்தின் இயக்குநர் மடோனா அஸ்வின் மற்றும் நடிகர் யோகிபாபு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

யோகிபாபுக்கு வந்த சிக்கல் - ‘மண்டேலா’ படத்தை தடை செய்யக் கோரி காவல் ஆணையரிடம் புகார்! | Yogibabu Complaint Police Mandela Movie

மண்டேலா படத்தை ஒளிபரப்ப, நிரந்தர தடை விதிக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு காவல்துறை சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றம் மூலம் பொதுநல வழக்கு தொடர இருப்பதாகவும் அச்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.