'இந்தியா அணியை தான் எதிர்கொள்ள காத்திருக்கிறேன்': பிரபல மல்யுத்த வீரர் ட்ரிபிள் எச் தெரிவித்துள்ளார்

roman shield randy
By Jon Jan 24, 2021 11:40 AM GMT
Report

இந்தியா அணியை நேரில் எதிர்கொள்ள காத்திருப்பதாக பிரபல மல்யுத்த வீரர் ட்ரிபிள் எச் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தியா அணி ஆஸ்திரேலியா அணியுடனான 4வது டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்று, டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாற்று சாதனைப் படைத்தது. இந்த வெற்றிக்கு பலவேறு தரப்பில் இருந்து இந்தியா வீரர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இந்த நிலையில் பார்டர் கவாஸ்கர் கோப்பை குறித்து உலகளவில் பிரபலமான WWE வீரர் டிரிபிள் எச் கருத்து தெரிவித்துள்ளார். சமீபத்தில் டிரிபிள் எச் அளித்த பேட்டியில் இந்திய அணியை வெகுவாக பாராட்டியுள்ளார். அவர், இந்தியா ஆஸ்திரேலியா தொடரை நானும் பார்த்தேன். நேர வேறுபாடு காரணமாக நேரலையாக பார்க்க முடியவில்லை.

ஆனாலும் மொத்த தொடரையும் கண்டுகளித்தேன். இந்தியா - ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் எனக்கு மிகப்பெரிய வியப்பை கொடுத்தது . அதிலும் போராடும் குணத்துடன் ஆடிய இந்திய அணியின் ஆட்டம் எனக்கு மலைப்பை கொடுத்தது. WWE போட்டிகளில் நடப்பது போல இந்திய அணி பெரிய அளவில் ஆட்டத்தில் பல்வேறு திருப்பங்களை ஏற்படுத்தியது.

இதை நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. இந்தியா ஆடிய விதத்தை பார்க்கும்போது ஒரு பரபரப்பான திரைப்படத்தை பார்ப்பது போலவே உணர்ந்தேன். இந்திய அணியை தனிப்பட்ட வகையில் அழைத்து பாராட்ட வேண்டும் என்று விரும்புகிறேன். இந்தியர்கள் கண்டிப்பாக இந்த வெற்றியை கொண்டாடுவார்கள் என்று நம்புகிறேன்.

இந்திய அணியுடன் சேர்ந்து நானும் இந்த வெற்றியை கொண்டாட ஆர்வமாய் உள்ளேன். இந்திய அணி இன்னும் பல உயரங்களை தொட வேண்டும். இன்னும் இதேபோன்ற வெற்றிகளை இந்திய அணி குவிக்க வேண்டும். இந்திய அணியின் வெற்றிக்கு வாழ்த்துக்கள் என்று WWE வீரர் டிரிபிள் எச் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியாவில் வரும் 26ம் தேதி குடியரசு தினத்தன்று WWE அமைப்பானது சிறப்பு மல்யுத்த போட்டியை ஏற்பாடு செய்துள்ளது. அந்த போட்டியைக் காண ஆஸ்திரேலியாவுடன் மோதி வரலாற்று வெற்றிக் கண்ட இந்திய அணி வீரர்கள் வர வேண்டும் என்றும். அவர்களை அங்கு எதிர்கொள்ள ஆவலுடன் இருக்கிறேன் என்றும் டிரிபிள் எச் தெரிவித்துள்ளார்.