உலகின் மிக உயரமான ரயில் பாலம்; அப்படியென்ன சிறப்புகள் - திறந்துவைத்த மோடி
உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலத்தை மோடி திறந்து வைத்துள்ளார்.
செனாப் ரயில் பாலம்
உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலம், ஜம்மு-காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் செனாப் ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ளது. இந்த பாலம் 1,315 மீட்டர் நீளமுடையது.
செனாப் நதியிலிருந்து 359 மீட்டர் உயரத்தில் உள்ளது. நில அதிர்வு மற்றும் காற்று சக்திகளைத் தாங்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. கத்ரா மற்றும் ஸ்ரீநகர் இடையேயான பயண நேரத்தை குறைத்து, ஜம்மு மற்றும் காஷ்மீரில் இணைப்பை மேம்படுத்துகிறது.
திறந்து வைத்த மோடி
இங்கு கடந்த ஜனவரி மாதம் வந்தே பாரத் விரைவு ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. வைஷ்ணவி தேவி கத்ரா ரயில் நிலையத்தில் இருந்து ஸ்ரீநகர் வரையில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த வந்தே பாரத் ரயில்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் நிலவும் குளிர்சியான சூழலுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தை இன்று பிரதமர் மோடி திறந்து வைத்தார்.