பைசர் கொரோனா தடுப்பூசி எடுத்து கொண்ட 23 முதியவர்கள் மரணம்- அதிர்ச்சியில் நார்வே

pfizer dead norway
By Jon Jan 17, 2021 03:20 PM GMT
Report

பைசர் பயோஎன்டெக் தடுப்பூசியின் முதல் டோஸ் எடுத்துக்கொண்ட முதியவர்கள் 23 பேர் இறந்த சம்பவம் நார்வேயில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவுக்கு எதிரான பைசர் தடுப்பூசி எடுத்துக்கொண்ட 23 முதியவர்கள் உயிரிழந்ததாக நார்வே அரசு தெரிவித்துள்ளது.

இந்த 23 பேரைத் தவிர, தடுப்பூசி செலுத்தப்பட்ட பலர் நோய்வாய்ப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தடுப்பூசியால் இறந்தவர்கள் பற்றிய விசாரணையை நார்வே அரசு அறிக்கை எடுக்கவுள்ளது.

தற்போதைய நிலவரப்படி நார்வேயில் பைசர் தடுப்பூசி எடுத்துக்கொண்ட 80 வயதை கடந்தவர்களுக்கு பாதகமான எதிர்வினைகள் இந்த தடுப்பூசி ஏற்படுத்தியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் இவர்களின் மரணத்திற்கு ஃபைசர் தடுப்பூசிதான் காரணம் எனபதை நேரடியாக இன்னும் நிரூபிக்கப்படவில்லை.

ஆனாலும் இறந்த 23 பேரில் 13 பேர் வயிற்றுப்போக்கு, குமட்டல் மற்றும் காய்ச்சல் போன்றஅறிகுறிகள் இருந்ததாக அந் நாட்டு மருத்துவர்கள் தெரிவிகின்றனர்.