வயிற்று வலி தாங்க முடியாமல் தொழிலாளி தற்கொலை

suicide worker pain Andippatti
By Jon Apr 03, 2021 11:01 AM GMT
Report

வயிற்று வலி தான முடியாமல் மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை செய்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆண்டிப்பட்டி அருகே உள்ள டி.சுப்புலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது44). தொழிலாளி. இவர் குடிபழக்கத்திற்கு அடிமையாகி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.

இதனால் வயிற்று வலி தாங்க முடியாமல் மதுவில் விஷம் கலந்து குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். இதையடுத்து அவரை உறவினர்கள் மீட்டு தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆண்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.