10வது முடிச்சிருந்தா போதும்.. போஸ்ட் ஆபிசில் வேலை - இதை உடனே பண்ணுங்க..

Tamil nadu India
By Sumathi Aug 05, 2023 04:27 AM GMT
Report

போஸ்ட் ஆபிசில் 30 ஆயிரம் காலியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஞ்சல் துறை

அஞ்சல் துறையில் காலியாக உள்ள 30, 041 கிராம அஞ்சல் பணியாளர்களுக்கான (GRAMIN DAK SEVAKS -GDS) ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில், தமிழ்நாட்டில் மட்டும் 2,994 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

10வது முடிச்சிருந்தா போதும்.. போஸ்ட் ஆபிசில் வேலை - இதை உடனே பண்ணுங்க.. | Work In Postal Department Full Details

பொதுப் பிரிவினருக்கு 1406 இடங்களும் , ஓபிசி பிரிவினருக்கு 689 இடங்களும், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்தவருக்கு 280 இடங்களும் , 492 இடங்கள் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவருக்கும், 20 இடங்கள் பட்டியல் பழங்குடியியினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

விண்ணப்பத் தகுதி

இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், குறைந்தபட்சம் 10ம் வகுப்பு அல்லது அதற்கு சமமான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளை கட்டாயப் பாடங்களாகவோ அல்லது விருப்பப் பாடங்களாகவோ எடுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

10வது முடிச்சிருந்தா போதும்.. போஸ்ட் ஆபிசில் வேலை - இதை உடனே பண்ணுங்க.. | Work In Postal Department Full Details

மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். குறைந்தபட்ச வயது - 18, அதிகபட்ச வயது - 40. மேலும், 10ம் வகுப்பு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதிப் பட்டியல் (Merit List) தயாரிக்கப்படும். Grade 9.5 என்ற விழுக்காட்டு அளவால் பெருக்கப்பட்டு, மதிப்பெண்களாக மாற்றம் செய்யப்படும்.

இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ. 100. பட்டியல் சாதிகள்/ பட்டியல் பழங்குடியினர்/ அனைத்துப் பிரிவுகளையும் சேர்ந்த பெண்கள், மாற்றுத் திறனாளிகள்/ திருநர்கள் ஆகிய பிரிவைச் சார்ந்த விண்ணப்பதார்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. இந்த பதவிக்கான விண்ணப்ப செயல்முறை ஆன்லைன் மூலமாக மட்டுமே நடைபெறும். indiapostgdsonline.cept.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி 23.08.2023 ஆகும்.