தமிழர் வேலையை பறிக்காதே - Su Venkatesan MP கடும் கண்டனம்
தபால் ஊழியர் நியமன முறைக்கு அடுத்து தற்போது தபால் உதவியாளர் பணியில் 946 பேரில் 46 பேர்கள் மட்டுமே தமிழகத்தை சேர்ந்தவர்கள் உள்ளதை கண்டிக்கும் வகையில் மதுரை எம்.பி.,சு.வெங்கடேசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மதுரை எம்.பி.,சு.வெங்கடேசன் தனது டுவிட்டர் பக்கத்தில், தமிழகத்தில் தபால் பிரிக்கும் 946 பேரில் 46 பேர்கள் மட்டுமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.
இந்திய அஞ்சல் துறையில் தமிழ்நாட்டில் அஞ்சல் உதவியாளர்களாக, தபால் பிரிப்பு உதவியாளர்களாக பணியாற்றுவதற்காக 10.02.2022 வெளியிடப்பட்டுள்ள 946 பேர் கொண்ட தேர்வுப் பட்டியலின் நிலைமை இது.
மத்திய பணியாளர் தேர்வு (Staff Selection Commission) 2018 அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்டு இருப்பவர்கள்.
பெயர்களை வாசித்தால் கல்பித், பவார், சிபு, அனூப், சாகா, மண்டல், சிங், லங்கா, பூனம், நீட்டு, மிஸ்ரா, பண்டிட், கௌரவ், சிபு, மித்ரா, குப்தா... இப்படியே நூற்றுக் கணக்கில் உள்ளது.
கண்ணை விரித்து தேடினால் எங்காவது முனியசாமி, கணேச பாண்டி, ராஜாராம் என்ற ஒரு சில தமிழ்ப் பெயர்கள் மட்டுமே உள்ளன. எனவே, மாநில அளவில் தேர்வு நடத்த வேண்டும். தமிழறிவை உறுதி செய்ய வேண்டும்.
தமிழர் வேலையை பறிக்கக்கூடாது" என பதிவிட்டுள்ளார் தபால் ஊழியர் நியமன முறையில் தமிழ்த் தேர்ச்சிக்கான தேர்வு இணைக்கப்பட வேண்டும்.
பள்ளி இறுதி தேர்வு/ மேல்நிலை கல்வித் தேர்வில் தமிழ் பாடமாக இருந்து அவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தால் இந்த தேர்வில் விதி விலக்கு அளிக்கலாம் என வலியுறுத்தி
மத்திய அரசின் தகவல் தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்க்கு சு.வெங்கடேசன் எம்.பி கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.