இவுங்க 2 பேர் கூட ஹோட்டல் ரூம் ஷேர் பண்ணவே முடியாது - அடம்பிடிக்கும் ரோகித்

Rohit Sharma Mumbai Indians IPL 2024
By Karthick Apr 10, 2024 02:47 AM GMT
Report

இவர்களுடன் எப்போதும் தான் அறையை பகிர்ந்து கொள்ள மாட்டேன் என மும்பை அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

ரோகித் சர்மா - மும்பை இந்தியன்ஸ்

நடப்பு தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி கடும் நெருக்கடிக்கு மத்தியில் விளைய்டி வருகின்றது. முதல் 3 போட்டிகளில் தோல்வியடைந்ததை விடவும் மும்பை அணிக்கு இந்த ஆண்டு கேப்டன் மாற்றப்பட்டது தான் ரசிகர்களை பெரிதாக காயப்படுத்தியுள்ளது.

wont-share-room-with-these-2-players-rohit-sharma

தொடர்ந்து மைதானத்திலும், சமூகவலைத்தளத்திலும் ரோகித் சர்மாவிற்கு ஆதரவாகவும், ஹர்திக் பாண்டியாவிற்கு எதிராகவும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். கடைசியாக டெல்லிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றது. இது ரசிகர்களுக்கு ஆறுதலான விஷயமாக அமைந்தது.

ஹர்திக் கீழ் விளையாட முடியாது - ரோகித்தை தொடர்ந்து விலக முடிவெடுத்த MI நட்சத்திரங்கள்

ஹர்திக் கீழ் விளையாட முடியாது - ரோகித்தை தொடர்ந்து விலக முடிவெடுத்த MI நட்சத்திரங்கள்

ரூம் ஷேர்....

இருப்பினும் இன்னும், எதிர்கருத்துகள் வெளிப்பட்டு கொண்டே தான் இருக்கின்றது. இதற்கு மத்தியில் தான், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ரோகித் சர்மா இந்த 2 வீரர்களுடன் ஹோட்டல் அறையை பகிர்ந்து கொள்ளவே மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

wont-share-room-with-these-2-players-rohit-sharma

தற்போது அனைவருக்குமே தனித்தனியாக அறை கிடைக்கிறது ஆனால், ஒருவேளை தனி அறையை மற்ற வீரர்களுடன் பகிர வாய்ப்பு கிடைத்தால் நிச்சயமாக தவான் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோருடன் பகிரவே மாட்டேன் என கூறி காரணம் அவர்கள் இருவருமே குளறுபடியானவர்கள் என வேடிக்கையாக தெரிவித்துள்ளார்.