பாலியல் வன்கொடுமை - காதலனை நம்பி சென்ற பெண்..வீடியோ காட்டி விடாமல் நடந்த கொடூரம்!

Tamil nadu Sexual harassment Crime trichy
By Swetha Sep 04, 2024 03:30 PM GMT
Report

காதலனை நம்பிச் சென்ற இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் வன்கொடுமை  

திருச்சி மாவட்டம் சிறுமருதூர் கிராமத்தை சேர்ந்தவர் சிலம்பரசன். இவர் ஒரு கல்லூரி மாணவியை காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் தனியாக பேச வேண்டும் என்று காதலியை அழைத்து சென்றுள்ளார் சிலம்பரசன்.

பாலியல் வன்கொடுமை - காதலனை நம்பி சென்ற பெண்..வீடியோ காட்டி விடாமல் நடந்த கொடூரம்! | Women Was Raped Multiple Time By Her Boyfriend

அதாவது திருச்சி மாருதி நகரில் அமைந்துள்ள அவரது நண்பனின் வீட்டிற்கு அந்த கல்லூரி மாணவியை கொண்டு சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. மேலும், அந்த கொடூரத்தை வீடியோவாக எடுத்து வைத்து கொண்ட சிலம்பரசன்,

பாலியல் வன்கொடுமை செய்தால் இனி மரண தண்டனை - நிறைவேறிய சட்டம்!

பாலியல் வன்கொடுமை செய்தால் இனி மரண தண்டனை - நிறைவேறிய சட்டம்!

 நடந்த கொடூரம்

அவ்வப்போது வார இறுதி நாட்களில் அதனை காட்டி மிரட்டி தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, கல்லூரி மாணவி கர்ப்பமடைந்தது தெரியவந்ததும் அவருக்கு கருக்கலைப்பு மாத்திரைகளையும் சிலம்பரசன் வாங்கி கொடுத்துள்ளான்.

பாலியல் வன்கொடுமை - காதலனை நம்பி சென்ற பெண்..வீடியோ காட்டி விடாமல் நடந்த கொடூரம்! | Women Was Raped Multiple Time By Her Boyfriend

இந்தச் சம்பவம் தொடர்பாக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தாயுடன் சேர்ந்து பாதிக்கப்பட்ட மாணவி புகார் அளித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்ப்புகள் கிளம்பி உள்ளது.