பெண்ணிற்கு வந்த வரன், 14 பேரில் யாரை மணப்பது? - சர்ச்சையை கிளப்பிய டுவீட்!
பெண் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் யாரை திருமணம் செய்வது என்று பதிவிட்டது வைரலாகி வருகிறது.
திருமண வரன்
மேட்ரிமோனி தளங்கள் மூலம் திருமண வரன்களை தேடுவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இச்சமயத்தில் 29 வயதான பி.காம் பட்டதாரி பெண் ஒருவரின் டுவிட்டர் பதிவு விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்த பெண் தற்போது வேலை எதற்கும் செல்லவில்லை. அவர் மேட்ரிமோனி மூலம் வரன் தேடியதில் 14 பேரை தேர்வு செய்துள்ளார்.
டுவீட்
இந்நிலையில், மேட்ரிமோனி மூலம் அந்த பெண் தேர்வு செய்த 14 பேரின் வயது மற்றும் அவர்கள் பணிபுரியும் நிறுவனங்களையும் பட்டியலிட்டு அவர்களில் ஒருவரை திருமணம் செய்ய வேண்டும். அந்த நபரை தேர்வு செய்ய உதவுமாறு குறிப்பிட்டிருந்தார்.
அவரது இந்த பதிவு வைரலான நிலையில், பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதில் சிலர், அந்த பெண்ணின் கோரிக்கைகள் நெறிமுறையற்றது எனவும், சிலர் அந்த பெண்ணுக்கு ஆதரவாகவும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.