பெண் உள்ளாடைக்குள் இருந்த பாம்புகள் - ஷாக்கான அதிகாரிகள்!
பெண் ஒருவர் தனது உள்ளாடைக்குள் மறைத்து பாம்புகளை கடத்திய சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடத்தல்
ஒரு நாட்டில் உள்ள அரிய உயிரினங்களை ஆராய்ச்சி மற்றும் பல பயன்பாடுகளுக்காக இன்னொரு நாட்டிற்கு சட்ட விரோதமாக கடத்த சில கும்பல்கள் செயல்பட்டு வருகின்றன. இதுபோல சமீபத்தில் சீனா – ஹாங்காங் இடையேயான எல்லை பகுதியில் பெண் ஒருவர் கடத்திய சம்பவம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இவர் எல்லையை கடந்து செல்லும்போது அவரது உடலமைப்பு வழக்கத்தை விட வித்தியாசமாக இருந்ததால் சோதனை அதிகாரிகள் சந்தேகமடைந்துள்ளனர். அவரை தனியாக அழைத்து சோதனை செய்தபோது அவரது உள்ளாடைக்குள் சாக்ஸில் ஏதோ சுற்றப்பட்டு வைக்கப்பட்டிருந்தது.
அதிகாரிகள் ஷாக்
இந்நிலையில், அந்த சாக்ஸ் பேக்கேஜ்களை எடுத்து அதிகாரிகள் பிரித்து பார்த்தனர். அதில் சில பாம்புகள் சுற்றப்பட்டு இருந்துள்ளது, இதனால் சோதனை செய்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். அதில் இருந்த 5 பாம்புகளும் 'corn snakes' பாம்பு வகையைச் சேர்ந்தவை என்று South China Morning Post தெரிவித்தது.
இந்த பாம்புகள் மத்திய அமெரிக்க நிலங்களில் வாழக்கூடியவை என்றும் அவற்றை முறைகேடாக அந்த பெண் உள்ளாடையில் வைத்து கடத்தி சென்றதும் தெரியவந்துள்ளது.