இளம்பெண் வெளியிட்ட வீடியோ; மனைவியிடம் வசமாக சிக்கிய கணவன் - என்ன நடந்தது?
இளம்பெண் வெளியிட்ட வீடியோவால் கணவன் தன் மனைவியிடம் மாட்டியுள்ளார்.
வைரல் வீடியோ
அமெரிக்காவைச் சேர்ந்தவர் மைகா ரென்னி. இவர் மியாமியில் உள்ள கடற்கரைக்கு சுற்றுலா சென்றிருந்தார். அங்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தன்னை அறிமுகப்படுத்தி இவரிடம் பேசியுள்ளார். அப்போது, மைகா ரென்னி மது அருந்தி இருந்தார்.
தொடர்ந்து, இருவரும் உரையாடியதை வீடியோவாக பதிவு செய்துள்ளனர். பின்னர் பிரியும்போது அந்த நபர் இந்த பெண்ணிடம் ஃபோன் நம்பரை கொடுத்துவிட்டு சென்றுள்ளார். ஆனால், அந்தப் பெண் ஃபோன் நம்பரை நினைவில் வைத்துக் கொள்ளவில்லை. பின் அவரை சந்திக்க விரும்பியுள்ளார்.
சிக்கிய கணவன்
எனவே கடற்கரையில் எடுத்த வீடியோவை பதிவிட்டு அந்த நபரை கண்டுபிடிக்க உதவுமாறு அவர் கேட்டுக் கொண்டார். மேலும், அவருக்கு திருமணம் ஆகியிருக்காது என்று தான் நம்புவதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்த வீடியோ வைரலான நிலையில்,
அந்த அடையாளம் தெரியாத நபரின் மனைவி என்று கூறி மைகாவை, ஷேரி என்ற பெண் தொடர்பு கொண்டுள்ளார். என் கணவரின் ஃபோன் நம்பரை நானே கொடுத்தாகவும் அவரிடம் கூறுங்கள் எனவும் தெரிவித்துள்ளார். உடனே மைகா மன்னிப்பு கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த மனைவி,
“இது உங்கள் தவறு இல்லை. என் கணவர் எதைப்பற்றியும் கவலை கொள்ள மாட்டார். ஆனால், நானும் அப்படியே இருப்பேன் என்று நம்பிவிடாதீர்கள். ஆனால், கணவர் உடனான வீடியோவை வெளியிட்டதற்கு நன்றி. இருட்டில் நடக்கின்ற அனைத்தும் வெளிச்சத்திற்கு வந்தே தீரும்” எனத் தெரிவித்துள்ளார்.