நீ கண்டிப்பா இன்னொரு கல்யானம் பண்ணிக்கோ - சிறைக்கு செல்லும் முன் மனைவியிடம் கெஞ்சிய கணவன்!

Viral Video China
By Sumathi Jul 12, 2023 09:36 AM GMT
Report

மனைவியை மறுமணம் செய்துக்கொள்ள கணவன் கெஞ்சிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

கொலை குற்றம் 

சீனா, மத்திய ஹூபே மாகாணத்தில் 3 நபர்கள் இணைந்து இளைஞர் ஒருவரை கொலை செய்துள்ளனர். அதில் இருவர் பிடிபட்ட நிலையில் ஒருவர் தலைமறைவானார். அவரது பெயர் ஜோவ். இந்நிலையில், அவர் குவாங்சோவில் தங்கியிருப்பதாகத் தகவல் கிடைத்ததையடுத்து கைது செய்யப்பட்டார்.

நீ கண்டிப்பா இன்னொரு கல்யானம் பண்ணிக்கோ - சிறைக்கு செல்லும் முன் மனைவியிடம் கெஞ்சிய கணவன்! | Chinese Killer Urges Wife To Find New Husband

அப்போது புறப்படுவதற்கு முன் அவர் தன் மனைவியிடம் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. அதில், தனது அண்ணியிடம், விவாகரத்து ஒப்பந்தம் முடிந்துவிட்டது; அதில் உங்கள் சகோதரியை கையெழுத்திடச் சொல்லுங்கள்.

கெஞ்சிய கணவன்

நீங்கள் அவரை, மறுமணம் செய்ய வற்புறுத்த வேண்டும். இனி, எனக்காக அவர் காத்திருக்க வேண்டாம். நான் சிறையிலிருந்து திரும்ப வரமாட்டேன்" எனக் கூறுகிறார். அதற்கு அவரது மனைவி "உனக்கு நான் வேண்டாமா? இதற்கு, நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்” என அழுகிறார்.

நீ கண்டிப்பா இன்னொரு கல்யானம் பண்ணிக்கோ - சிறைக்கு செல்லும் முன் மனைவியிடம் கெஞ்சிய கணவன்! | Chinese Killer Urges Wife To Find New Husband

எனக்காக காத்திருக்காதே என கணவர் திரும்ப திரும்ப சொல்ல அவரது வாயை மூடுகிறார் மனைவி. தொடர்ந்து பேசிய அவர், “இத்தனை ஆண்டுகளாக நான் என் பெற்றோரைப் பார்க்கவில்லை.

அவர்களிடம் என் குழந்தைகளைக் காட்டவில்லை. நான் சிறுவயதில் தவறு செய்தேன். நான் அவரை அடித்துக் கொன்றிருக்கக் கூடாது" எனத் தெரிவித்துள்ளார்.