12 வருட சேமிப்பை நம்பி கொடுத்த மகள் - மொத்தத்தையும் காலி பண்ண தாய்!
தாயை நம்பி மகள் தனது சேமிப்பை கொடுத்துள்ளார், அதனை மொத்தமாக செலவழித்த சம்பவம் பரவலாகி வருகிறது.
சேமிப்பு பணம்
தைவான் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் 12 ஆண்டுகளாக கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை சேமித்து வைத்துள்ளார். இவர் பட்டம் பெற்றதிலிருந்து கிட்டத்தட்ட அனைத்து சம்பளத்தையும் சேர்த்து வைத்துள்ளார். இவர் மாதாந்திர சம்பளத்தில் இவரது செலவிற்காக ரூ.11,000 மட்டுமே எடுக்கொள்வதாக கூறியுள்ளார்.
அதில் மொத்தமாக NT$2.66 மில்லியன் (இந்திய மதிப்பில் 69 லட்சத்துக்கும் மேல்) இருந்துள்ளது. இது மொத்தத்தையும் இவரது தாயை நம்பி அவரிடம் கொடுத்துள்ளார். ஆனால் அவரது தாய் மொத்த பணத்தையும் செலவழித்துவிட்டதாக தற்பொழுது கூறியுள்ளார்.
வைரல்
இந்நிலையில், இவர் தனது சமூக வலைதள பக்கத்தில் அவர் NT$2.66 மில்லியன் சேமித்து வைத்தார். ஆனால், சமீபத்தில் அவர் தனது வங்கி கணக்கைச் சரிபார்த்தபோது, அதில் வெறும் NT$50,000 மட்டுமே இருந்துள்ளது. அதாவது, 1 லட்சத்திற்கும் குறைவாக அதில் இருந்துள்ளது, இதனால் அதிர்ச்சியடைந்த இவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டார்.
பேஸ்புக் பதிவை பலரும் பகிர்ந்து வருகின்றனர். மேலும், அவரது தாய் முழு பணத்தையும் இப்படி செலவு செய்திருப்பது தான் இங்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்த பெண், 12 ஆண்டுகளாக உழைத்து சம்பாதித்த பணம் இப்படி வீணாகிவிட்டதே என்று தனது தாயின் மீது கவலை கொள்ளவில்லை.
இப்படியொரு அதிர்ச்சிகரமான உண்மை தெரிந்த பிறகும், தனது தாய் பணத்தை சரியாக கையாளவில்லை என்பது அவருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது என்று கூறி தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.