பிஸ்மில்லா என்று கூறி பன்றிக்கறி சாப்பிட்ட பெண்.. 2 ஆண்டு சிறை தண்டனை - நீதிமன்றம் அதிரடி!
பெண் ஒருவர் பன்றிக்கறி சாப்பிடுவதற்கு முன் பிஸ்மில்லா என்று கூறியதால் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டிக் டாக் பிரபலம்
இந்தோனேசியா நாட்டை சேர்ந்தவர் லினா முகர்ஜி (33). டிக்டாக் பிரபலமான இவர் தொடர்ந்து வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார். இவருக்கு ஏராளமான ஃபாலோவர்ஸ் உள்ளனர். தற்பொழுது இவர் டிக்டாக் பக்கத்தில் கடந்த மார்ச் மாதம் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வைரலானது.
அந்த வீடியோவில் இவர் கையில் பன்றி இறைச்சித் துண்டை வைத்துக் கொண்டு சாப்பிடுவதற்கு முன் இஸ்லாமியர்கள் சொல்லும் ‘பிஸ்மில்லா’ என்ற வார்த்தையை சொல்லி அந்த பன்றிக்கறியை இவர் சாப்பிடுகிறார்.
நீதிமன்றம் அதிரடி
இந்நிலையில், இஸ்லாமியர்கள் கூறும் ‘பிஸ்மில்லா’ என்ற வார்த்தைக்கு அரபியில் ‘இறைவனின் பெயரால்’ என்று அர்த்தம். இந்த வார்த்தையை பயன்படுத்தி இஸ்லாம் மதத்தில் தடை செய்யப்பட்ட உணவான பன்றிக்கறியை லினா முகர்ஜி சாப்பிட்ட வீடியோ அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் பலர் இவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டு சமூக வலைதளத்தில் கொந்தளித்து வந்தனர்.
இதனையடுத்து இந்தோனேசிய போலீசாரால் லினா முகர்ஜியை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர், பாலேம்பாங் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனையும், 250 மில்லியன் ருபையா அபராதமும் விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். பாலி தீவுக்கு சுற்றுலா சென்றபோது ஆர்வத்தில் அப்படி ஒரு வீடியோவை எடுத்ததாக அவர் நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.