ராகுல்காந்தி மனு தள்ளுபடி : 2 ஆண்டுகள் சிறை உறுதி ?

Nationalist Congress Party Rahul Gandhi
By Irumporai Apr 20, 2023 06:40 AM GMT
Report

ராகுல்காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவினை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

எம்பி பதவி பறிப்பு

மோடி பெயர் குறித்து சர்ச்சையாக பேசியதாக சூரத் நீதிமன்றத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்பளித்தது. இந்த தீர்ப்பின் காரணமாக வயநாடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ராகுல்காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டது. 

ராகுல்காந்தி மனு தள்ளுபடி : 2 ஆண்டுகள் சிறை உறுதி ? | Rahul Gandhi Appeal Against The 2 Year Jail

மனுதள்ளுபடி

இந்த நிலையில் தனக்கு வழங்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையினை நீக்க கோரொ ராகுல்காந்தி தரப்பில் சூரத் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்ட நிலையில் இன்று தீர்ப்பினை நீதிமன்றம் வழங்கியது அதன்படி இன்று, சூரத் நீதிமன்றத்தில் ராகுல்காந்தி தாக்கல் செய்த மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இதன் காரணமாக ராகுல்காந்திக்கு வழங்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனை என்பது உறுதியாகியுள்ளதாக்ல் ராகுல்காந்தி தனக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து, உயர்நீதிமன்றம் அல்லது உச்சநீதிமன்றம் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.