ரகசியமாக காதலனை சந்திக்க சென்ற பெண்.. நோட்டமிட்ட இளைஞர்கள் செய்த கொடூரம் - அதிர்ச்சி!

Thoothukudi Sexual harassment
By Vinothini Sep 09, 2023 06:56 AM GMT
Report

பெண் ஒருவர் தனது காதலனை சந்திக்க சென்றபோது நேர்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதலர்கள் சந்திப்பு

தூத்துக்குடி மாவட்டம், கேவிகே நகரைச் சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் இளைஞர் ஒருவருடன் பழகி வந்துள்ளார். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது, அதனால் இவர்கள் அடிக்கடி வெளியே சென்று தனிமையில் சந்தித்து வந்தனர்.

women-raped-in-thoothukudi

அதேபோல், நேற்று முன்தினம் தூத்துக்குடி தெர்மல் நகர் பகுதியில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை குடியிருப்பு அருகே இருவரும் சந்தித்தனர். அப்பொழுது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் இவர்களை அடித்து விரட்டினர்.

பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை

இந்நிலையில், அந்த இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்களும் காதலனை அடித்து விரட்டிவிட்டு, அந்த பெண்ணை இழுத்து கடத்தி சென்றனர். அப்பெண்ணை தெற்கு பீச் ரோட்டில் உள்ள ரயில்வே டிராக் பகுதிக்கு கூட்டிச் சென்று அந்த இரண்டு இளைஞர்களும் அடுத்தடுத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.

women-raped-in-thoothukudi

அதன்பிறகு அந்த பெண்ணை அங்கேயே விட்டு தப்பி சென்றனர், அந்த பாதிக்கப்பட்ட பெண் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் அந்த இளைஞர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.