ராஜினாமா செய்ய சென்ற மணிப்பூர் முதல்வர் - கடிதத்தை கிழித்தெறிந்த பெண்கள்!
மணிப்பூரில் தொடர்ந்து சில நாட்களாக கலவரம் வெடித்த நிலையில் ராஜினாமா செய்ய சென்ற முதல்வரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மணிப்பூர்
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் வசிக்கும் மைதேயி வகுப்பினர், தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். இதனால் அங்கு இரு பிரிவினருக்கும் இடையில் கலவரம் ஏற்பட்டது.
அது நீடித்து கொண்டே போனது, இதற்கு அரசு எந்த ஒரு ஆக்ஷனும் எடுக்கவில்லை. இந்த கலவரத்தில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கலவரத்தைக் கட்டுப்படுத்த முடியாததால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய பைரன் சிங் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. மத்திய அரசும் அவரை ராஜினாமா செய்வதற்கு வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
ராஜினாமா கடிதம்
இந்நிலையில், முதல்வர் பைரன் சிங் தனது ராஜினாமா கடிதத்துடன் ஆளுநர் மாளிகைக்கு சென்றார். அப்பொழுது, அங்கு நூபு லால் காம்ப்ளெக்ஸ் பகுதியில் நூற்றுக்கணக்கான பெண்கள் திரண்டனர்.
முதல்வரின் காரை தடுத்து நிறுத்தி ராஜினாமா கடிதத்தை கிழித்து எறிந்தனர்.
At this crucial juncture, I wish to clarify that I will not be resigning from the post of Chief Minister.
— N.Biren Singh (@NBirenSingh) June 30, 2023
இதனை தொடர்ந்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் "நெருக்கடியான இந்தச் சூழலில் நான் பதவிவிலகப்போவதில்லை என்பதைத் தெளிவுபடுத்துகிறேன்" என்று கூறியுள்ளார்.