பெண்களுக்கு மாதம் ரூ.1000; விண்ணப்பிக்க இது ரொம்ப அவசியம் - முக்கிய தகவல்
மகளிர் உரிமைத் தொகை பெற விண்ணப்பிப்போருக்கு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
மாதம் ரூ.1000
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதற்காக அனைத்து நியாய விலைக்கடைகளிலும், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விண்ணப்பிக்கும் பயனாளர்களின் கைவிரல் ரேகை அவசியம் என்று உணவு பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. நியாயவிலைக்கடைகளில் கைரேகை பதிவு கருவிகளை முறையாக சீரமைக்கவும், பணியாளர்களுக்கு அரசு வலியுறுத்தப்பட்டுள்ளது.
கைரேகை முக்கியம்
தகுதி வாய்ந்தவர்களுக்கு 1000 ரூபாய் அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கு வங்கி கணக்கு தொடங்கவும், ஆதார் அட்டைக்கு பதியவும் சிறப்பு முகாம்கள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆதார் இல்லாத விளிம்புநிலை மக்களுக்கு சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்து ஆதார் பெற்றுத்தர மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.