ஆண் நண்பருடன் தகாத உறவு.. திட்டமிட்டு கணவரை போட்டுத்தள்ளிய மனைவி - கொடூரம்!

Uttar Pradesh Crime Death
By Vinothini Aug 28, 2023 08:27 AM GMT
Report

பெண் ஒருவர் தனது கள்ளகாதலுக்காக கணவரை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்காதல்

உத்திரபிரதேசம் மாநிலம், முசாபர்நகர் மாவட்டம் முஜ்க்தா பகுதியை சேர்ந்தவர் செங்கல் சூலை உரிமையாளரான மெஹ்ராஜூதின். 45 வயதான இவருக்கு திருமணமாகி ஷாமா என்ற மனைவி உள்ளார். அவர் அதே பகுதியை சேர்ந்த அகீப் என்பவருடன் பழகி வந்தார், அது நாளடைவில் கள்ள காதலாக மாறியது.

women-illegal-affair-with-boy-bestie

இது குறித்து அந்த பெண்ணின் கணவருக்கு தெரியவந்தது, அப்பொழுது அவர் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்தார் மனைவி ஷாமா.

கொலை

இந்நிலையில், இவரது காதலுக்கு கணவர் தடையாக இருந்ததால் அவரை கொலை செய்ய திட்டமிட்ட ஷாமா தனது ஆண் நண்பருடன் சேர்ந்து அவரது கணவர் தூங்கிக் கொண்டிருக்கும்பொழுது துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளார்.

women-illegal-affair-with-boy-bestie

பின்னர், அவர்கள் இருவரும் அங்கிருந்து தப்பி சென்றனர், மேலும், கொல்லப்பட்ட மெஹ்ராஜூதினின் சகோதரர் அளித்த தகவலின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள ஷாமா மற்றும் அவரது ஆண் நண்பர் அகீப் ஆகியோரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.