திருமணம் ஆகாத பெண்களுக்கும் கருக்கலைப்பில் உரிமை - உச்சநீதிமன்றம் அதிரடி!
கருக்கலைப்பு செய்து கொள்ள அனைத்து பெண்களும் தகுதி உடைவர்கள் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கருக்கலைப்பு
திருமணமாகாத பெண் ஒருவர் கரு கலைக்க அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். யாருக்கு எந்த சூழலில் கருக்கலைப்பு செய்ய வேண்டும் என்ற விதிமுறைகளை ஒழுங்குபடுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
இதில், சட்டபூர்வமான மற்றும் பாதுகாப்பான கருக்கலைப்பு செய்து கொள்ள அனைத்து பெண்களுக்கும் உரிமை உண்டு. கருக்கலைப்பு செய்து கொள்ள அனைத்து பெண்களும் தகுதி உடைவர்கள்.
உச்சநீதிமன்றம்
கருக்கலைப்புக்கான உரிமை என்பது திருமணத்தின் மூலம் மட்டுமே கிடைக்கும் என்ற நிலையை மாற்றுவது அவசியம்.
பாதுகாப்பற்ற முறையில் கருக்கலைப்பு செய்துகொள்வது மட்டுமே தடுக்கப்பட வேண்டியது என நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.