கணவரின் நீண்ட ஆயுளுக்கு காலையில் விரதம் - மாலை விஷம் வைத்த மனைவி

Uttar Pradesh Death
By Karthikraja Oct 21, 2024 11:30 PM GMT
Report

கணவரின் நீண்ட ஆயுளுக்காக விரதம் இருந்த மனைவி சிறுது நேரத்தில் அவரை விஷம் வைத்து கொன்றுள்ளார்.

கர்வா சௌத்

கணவர் நீண்ட நாட்கள் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டுமென்று மனைவிகளும், நல்ல கணவர் அமைய வேண்டுமென்று திருமமாகாத இளம்பெண்களும் கர்வா சௌத்(karwa chauth) என்ற விரதம் இருப்பர். 

uttarpresh women poison in karwa chauth

பஞ்சாப், ஹரியாணா, ஹிமாசலப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தானில் உள்ள குடும்பங்களில் பாரம்பரியமாகக் இந்த விரதம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 

மனைவியின் நலனே முக்கியம் - 25 ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருக்கும் பாஜக எம்.பி

மனைவியின் நலனே முக்கியம் - 25 ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருக்கும் பாஜக எம்.பி

உணவில் விஷம்

இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் கௌசாம்பி மாவட்டத்தைச் சேர்ந்த சைலேஷ் குமாரின்(32) மனைவி சவிதாவும் நேற்று, தன் கணவரின் நீண்ட ஆயுளுக்காக கர்வா சவுத் விரதத்தை மேற்கொண்டுள்ளார்.

காலை முதலே சவிதாவின் இந்தப் பிரார்த்தனைக்கு அவரது கணவர் சைலேஷ் குமாரும் அவருக்கு உதவியாக இருந்துள்ளார். மாலையில் விரதத்தை முடித்து கொண்டு இருவரும் ஒன்றாக உணவருந்தியுள்ளனர்.

uttarpresh women poison in karwa chauth

அப்போது கணவருக்கு வைத்த உணவில் விஷம் கலந்திருந்த சவிதா சாப்பிட்டு கொண்டிருக்கும் போதே பக்கத்துக்கு வீட்டிற்கு சென்று வருகிறேன் என கூறி விட்டு தப்பியோடி விட்டார்.

கைது

மயங்கி விழுந்த சைலேஷ் குமாரை அவரது சகோதரர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி சைலேஷ் குமார் உயிரிழந்துள்ளார். இறப்பதற்கு முன்பு, மனைவி தனது உணவில் விஷம் வைத்திருந்தார் என சைலேஷ் குமார் வீடியோ பதிவு செய்துள்ளார்.

இது தொடர்பாக சைலேஷ் குமாரின் சகோதரர் அளித்த புகாரின் அடிப்படையில் சவிதாவை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.