லிஃப்ட்டிற்குள் தனியாக சிக்கி தவித்த பெண் - இறுதியில் நேர்ந்த சோகம்!

China Death Kazakhstan
By Vinothini Aug 02, 2023 06:21 AM GMT
Vinothini

Vinothini

in உலகம்
Report

 பெண் ஒருவர் தனியாக லிஃப்ட்டிற்குள் சிக்கிய பெண்ணுக்கு நடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லிஃப்ட்டில் சிக்கிய பெண்

உஸ்பெகிஸ்தானில் உள்ள தாஷ்கண்ட்டைச் சேர்ந்தவர் ஓல்கா லியோன்டிவா, இவருக்கு 32 வயது. இவர் தபால் விநியோகிக்கும் பணி செய்துவருகிறார். இவர் ஜூலை 24-ம் தேதி அன்று பணிக்காக சென்றிருந்தார், அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.

women-dead-in-lift

இதனால் அதிர்ச்சியடைந்நத குடும்பத்தினர், போலீசில் புகாரளித்தனர். பின்னர், 3 நாட்களுக்கு பிறகு இவர் ஓர் அடுக்குமாடிக் கட்டடத்தின் 9-வது மாடி லிஃப்டில் சடலமாக மீட்கப்பட்டார். தொடர்ந்து, இந்த பெண் தபால் வழங்குவதற்காக லிஃப்டில் சென்றிருக்கிறார். அப்பொழுது பாதி வழியில் லிஃப்ட் நின்றிருக்கிறது.

சடலமாக மீட்பு

இந்நிலையில், இவர் பயந்துபோய் பலமுறை உதவிக்காக கத்தி கூச்சலிட்டுள்ளார். ஆனால் வெளியே இருந்த யாருக்கும் அது கேட்கவில்லை என்று தெரிகிறது. இதனால் அவர் அங்கேயே உயிரிழந்துள்ளதாக கூப்படுகிறது, பின்னர் மூன்று நாட்களுக்கு பிறகு அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

women-dead-in-lift

மேலும், சீனாவில் தயாரிக்கப்பட்ட அந்த லிஃப்ட் பதிவுசெய்யப்படவில்லை. சம்பவத்தன்று அது வேலை செய்யும் நிலையில்தான் இருந்தது எனக் கூறப்படுகிறது. சம்பவம் நடந்த அன்று மின்வெட்டு ஏதும் இல்லை என்பதை மின்சார நிறுவனம் உறுதிசெய்திருக்கிறது.

குடியிருப்பாளர்களிடம் விசாரித்ததில் லிஃப்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே இந்தச் சம்பவம் நடந்திருக்கும் எனக் கூறப்படுகிறது. மேலும், இது கொலையா, விபத்தா என்ற நோக்கத்தில் போலீசர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.