போலி முகவரி மூலம் பல ஆண்களை வலையில் சிக்கவைத்து ஏமாற்றிய பெண் - போலீஸ் வலையில் சிக்கினார்!
திருவனந்தபுரம் அருகே போலி முகவரியை வைத்து பல ஆண்களை ஏமாற்றி பணம் பிரித்த பெண் கைது செய்யப்பட்டார்.
போலி முகவரி
திருவனந்தபுரம் அருகே அஸ்வதி என்ற இளம்பெண் ”அஸ்வதி அச்சு, அனுஸ்ரீ அனு” போன்ற பெயர்களைப் பயன்படுத்தி போலிக் முகவரிகள் மூலம் பல ஆண்களுடன் பேசி திருமணம் செய்வதாக கூறி பணம் பறித்துள்ளார்.
இதில் ஒரு போலீஸ் எஸ்.ஐ யும் ஏமாற்றிய வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து இவர், தனது போலி கணக்கை பயன்படுத்தி 68 வயது முதியவரிடம் ஆசைவார்த்தையில் பேசி திருமணம் செய்துகொள்வதாக கூறியுள்ளார். மேலும் அவருக்கு, 40,000 ரூபாய் கடன் உள்ளதாகவும், அதனை அடைத்தால் தான் திருமணம் நடக்கும் என்றும் கூறி பணம் பறித்துவிட்டு தலைமறைவாகியுள்ளார்.
போலீசிடம் சிக்கினார்
இந்நிலையில், அந்த முதியவர் போலீசிடம் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில், விசாரணை நடத்தியதில், இவர் ஏற்கனவே பலரை ஏமாற்றி பணம் பறித்தது தெரியவந்துள்ளது.
மேலும், இவர் பல பிரபலங்களையும் போலி கணக்குகள் மூலம் ஆபாசமாக சாட்டிங் செய்து அதனை வைத்து மிரட்டி பணம் பறித்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.
தொடர்ந்து, தலைமறைவான பெண்ணை சைபர் கிரைம் உதவியுடன் இருக்கும் இடத்தை கண்டறிந்து அவரை கைது செய்தனர்.