அடல் சேது பாலத்தில் இருந்து குதித்த பெண்..நொடிப்பொழுதில் நேர்ந்த சம்பவம் - வைரல் வீடியோ!

India Maharashtra Mumbai
By Swetha Aug 17, 2024 06:00 AM GMT
Report

தற்கொலைக்கு முயன்ற பெண்ணை கார் ஓட்டுநர் காப்பற்றிய சம்பவம் பரபரப்பை ஏறப்டுத்தியுள்ளது.

அடல் சேது

மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் அடல் சேது எனும் பாலம் அமைக்கபட்டுள்ளது. கடல் மீது அமைந்திருக்கும் இந்த பாலத்தின் விளிம்பில் நின்றுகொண்டு இருந்த இளம்பெண் ஒருவர் அங்கிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடல் சேது பாலத்தில் இருந்து குதித்த பெண்..நொடிப்பொழுதில் நேர்ந்த சம்பவம் - வைரல் வீடியோ! | Women Attempts Suicide In Adal Sedu Got Saved

பாலத்தின் பாதுகாப்பு தடுப்பு மீது அந்த பெண் அமர்ந்திருந்தார். அப்போது அந்த பெண்ணின் அருகே, வாடகை கார் ஓட்டுநர் டிரைவர் நின்றுகொண்டிருக்கிறார். அவர், தற்கொலைக்கு முயற்சி செய்யும் பெண்ணிடம் ஏதோ பேசுகிறார்.

அதற்குள் அந்த பெண் பாலத்தில் இருந்து குதித்து விடுகிறார். இதனை சற்றும் எதிர்பாராத கார் ஓட்டுநர் பாதுகாப்பு தடுப்புக்கு உள்புறமாக நின்றுகொண்டிருந்தவாறே பெண்ணின் தலை முடியை கெட்டியாக பிடித்துக் கொண்டார்.

பிரதமர் மோடி திறந்த அடல் சேது பாலம்..5 மாதத்திலேயே பிளந்துகொண்டதாக குற்றசாட்டு!

பிரதமர் மோடி திறந்த அடல் சேது பாலம்..5 மாதத்திலேயே பிளந்துகொண்டதாக குற்றசாட்டு!

 குதித்த பெண்..

அந்த சமயம் அங்கு வந்த ரோந்து போலீசார், ஒட்டுநருடன் இணைந்து, பெண்ணை போராடி மீட்டனர். கார் ஓட்டுநரின் துரித முயற்சியால் நூலிழையில் அந்த பெண்ணின் உயிர் தப்பியது. இது குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில்,

அடல் சேது பாலத்தில் இருந்து குதித்த பெண்..நொடிப்பொழுதில் நேர்ந்த சம்பவம் - வைரல் வீடியோ! | Women Attempts Suicide In Adal Sedu Got Saved

தற்கொலைக்கு முயன்ற பெண் ரீமா முகேஷ் படேல் என்பதும், அவர் மும்பை, முலுண்டில் வசிப்பவர் என்ற தகவல் தெரிவந்தது.அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே தற்கொலைக்கு முயன்ற பெண்ணை கார் ஓட்டுநர் மற்றும் போலீசார் இணைந்து மீட்ட காட்சிகள் உள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.