பெண்ணின் உள்ளாடை திருட்டு - இருதரப்புக்கு இடையே வெடித்த பயங்கர மோதல்!
பெண்ணின் உள்ளாடை திருட்டு சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உள்ளாடை திருட்டு
குஜராத், தண்டூகா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் 30 வயது பெண். இவரது உள்ளாடைகள் கடந்த 8 மாதங்களாக தொடர்ந்து தொலைந்து வந்துள்ளது. இது தொடர்ந்து நடந்துள்ளதால் சந்தேகத்தின் பேரில், துணி காயவைக்கும் பகுதியில் ரகசியமாக செல்போன் வைத்து வீடியோ எடுத்துள்ளார்.
அதில் தான், தனது உள்ளாடைகளை திருடிய நபர் தனது பக்கத்து வீட்டைச் சேர்ந்த 31 வயது இளைஞர் என்று தெரியவந்தது. அப்போது திருட்டின் போது அந்த இளஞரை பிடித்து கூச்சல் போட்டுள்ளார்.
வெடித்த கலவரம்
இதனால், அந்த நபர் பெண்ணை தாக்கி பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. அந்த சத்தம் கேட்டு வந்த குடும்பத்தினர் இளைஞரை தாக்கியுள்ளனர். அதனைத் தொடர்ந்து, இரு குடும்பத்துக்கும் இடையே கைக்கலப்பாகியுள்ளது.
மேலும், மோதல் கலவரமாகியுள்ளது. இதில் 10 பேர் காயமடைந்தனர். இதனை அறிந்த போலீஸார் வழக்குப்பதிவு செய்து 20 பேரை கைது செய்துள்ளனர்.