கர்ப்பமாக இருக்கிறேன்; வேலையை விட்டு தூக்கிய நிறுவனம் - நீதிமன்றம் அதிரடி!
கர்ப்பமாக இருந்த பெண்ணை நிறுவனம் வேலையில் இருந்து நீக்கியுள்ளது.
கர்ப்பமான பணிப்பெண்
பலூனா பாவெஜ்(32) என்ற பெண் ஹூவாங்ஸ் கிரில் என்ற நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிறுவனத்திற்கு சொந்தமாக கிழக்கு லண்டனில் சுஷினோயன் மற்றும் வட லண்டனில் டைஷோ என்ற ஜப்பானிய ரெஸ்டாரண்டுகள் உள்ளன.
2018 ஆம் ஆண்டு மேனேஜராக பணி அமர்த்தப்பட்ட நிலையில், 2019ல் கர்ப்பமாக இருப்பதாக நிறுவன உரிமையாளரிடம் தெரிவித்துள்ளார். அதன்பின், இந்த கர்ப்பிணி பெண்ணை டைஷோவில் இருந்து சுஷினோயன் ரெஸ்டாரண்டிற்கு ஷிஃப்ட் ஆகும்படி வற்புறுத்தி உள்ளனர்.
நீதிமன்றம் உத்தரவு
இது ஒத்துவராது என அந்தப்பெண் கூறியும் அதனை கேட்க மறுத்துள்ளனர். தொடர்ந்து, நாங்கள் சொல்வதை கேட்காவிட்டால் வேலையில் இருந்து நீக்கப்படுவாய். சம்பளத்தில் ஒரு ஆண்டுக்கு 4,000 யூரோ குறைக்க போவதாகவும் மிரட்டியுள்ளனர். மேலும், அதனை நடைமுறைப்படுத்தியும் உள்ளனர்.
ஏற்கனவே மலி என்ற மூன்று வயது பெண் குழந்தையை கொண்டிருந்த பெண்ணுக்கு இந்த செயல் அதிர்ச்சியை கொடுத்த நிலையில் வேலையை ரிசைன் செய்துள்ளார். அதன்பின் வழக்குத் தொடர்ந்த பெண்ணுக்கு, கர்ப்பமாக இருந்ததால் அவருக்கு நடத்தப்பட்ட பாகுபாடு மற்றும் தவறான முறையில்
அவரை வேலையை விட்டு அனுப்பியது போன்ற காரணங்களால் அவருக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு ஈடுகட்டும் வகையில் அவருக்கு ரூபாய் 36 லட்சத்தை வழங்கக்கோரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.