கதறிய மகள்..கண்முன்னே கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட தாய் - பதறவைக்கும் வீடியோ!
பெண்ணை ராட்சத அலை இழுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகள் கதறல்
மும்பை, ராபலி பகுதியைச் சேர்ந்தவர் முகேஷ் சோனார். இவரது மனைவி ஜோதி சோனார் (32). இவர்களுக்கு 6 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. சம்பவத்தன்று அங்குள்ள ஜூசு கடற்கரைக்கு சென்றுள்ளனர்.
அப்போது அங்கு கடல் சீற்றம் அதிகமாக இருந்ததால் யாரும் கடற்கரைக்குள் வர அனுமதிக்கப்படவில்லை. இதனால் இவர்கள் துறைமுகத்திற்கு சென்றுள்ளனர். அங்கும் சீற்றம் அதிகமாகவே இருந்துள்ளது.
தாய் பலி
எனவே, கரைக்கு அருகே உள்ள பாறையில் அமர்ந்துள்ளனர். கடல் அலை அவர்கள் மீது வேகமாக அடித்து சென்றது. அதனை அங்குள்ள ஒருவரிடம் வீடியோ எடுக்க கூறியுள்ளனர்.
அப்போது எதிர்பார்க்காத வகையில், ஒரு ராட்சத அலை அவர்கள் மீது விழுந்தது.
A 27-year-old woman drowned in the sea at Bandstand in Bandra, Mumbai. This incident occurred on Sunday evening, July 9th. The woman was taking a selfie with her husband on a rock near the shore when a big wave came, sweeping her away into the water. @indiatvnews pic.twitter.com/rzxxI1RBC3
— Suraj Ojha (@surajojhaa) July 16, 2023
அடுத்த நொடியே அது ஜோதி சோனாரை அப்படியே வாரி கடலுக்குள் கொண்டு சென்றது. இதனை பார்த்த மகள், மம்மி.. மம்மி என கதறியுள்ளார். தொடர்ந்து கணவரும் அலையை நோக்கி ஓடிய நிலையில், மனைவியை காப்பாற்ற முடியவில்லை.
தகலறிந்த தீயணைப்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அதனையடுத்து அவரது சடலத்தை மீட்டனர்.